search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people missing"

    • சின்னமனூர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை மகள் தரணி(19). இவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தரணியை தேடி வருகின்றனர்.

    தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருகிறார். இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கேதர்சுமார்(35) என்பவர் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல.
    • அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தங்கபாண்டி(19). இவர் வீரபாண்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ. முத லாம்ஆண்டு படித்து வரு கிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வீரபாண்டி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாண வனை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி பூங்கோதை(23). இவர் தனது மனைவியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பூங்கோதை மாயமாகி இருந்தார். இதுகுறித்து பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பூங்கோதையை தேடி வருகின்றனர்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43). நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்தார். சின்னமனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் யுவன் (44). லாரி டிரைவர். சம்பவத்தன்று கேரளாவுக்கு லோடு ஏற்றி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. லாரி அலுவலகத்தில் விசரித்தபோது யுவன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றது தெரிய வந்தது.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி சிவாஜிநகரை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ஜனனி(17). தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஜனனி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் கருப்பையா(55). கூலி தொழிலாளி. கேரளாவில் உள்ள தனது அண்ணனை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பார்சியாபானு (வயது20). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் முதலாம் ஆண்டு தொலைதூர கல்வி படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பிச்சை என்ற வீராச்சாமி (வயது88). இவருடைய மகன்கள் மற்றும் மகள் ஆகியோருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு சென்று வந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கங்காதேவி (வயது19). இவர் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கிருஷ்ணா கவுண்டர் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஹேமலதா (14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று துரைசாமி தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஹேமலதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து துரைசாமி மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்கள்.

    வேலாண்டிபாளையம் அருகே உள்ள பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மனைவி அமுத பூரணி (36). இவர் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது கணவரிடம் தாய் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும், அவரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை .

    அமுத பூரணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து கார்த்திகேயன் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • தேனி அருகே இளம் பெண் உள்பட வாலிபரும் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகள் மகாவித்யா(17). இவர் மதுரை சாலையில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற மகாவித்யா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் விஷ்வன்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார்(28). இவர் சின்னமனூர் காதிகிராப்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தீப் (வயது 23). இவர் கோவையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். செல்போன் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் வினோதினி (19). இவர் தாமரைக்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை ஜெமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கலைஞர் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது36). இவர் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக தனது தந்தையிடம் கூறி சென்ற தினேஷ்குமார் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்ைல. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி தனியார் மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது51). பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது மகள் ஒடிசியா (17). சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ரம்யா(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிக்காமல் ரம்யா செல்போன் பார்த்து வந்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து(27). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • போடி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயமாகினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி லீலாவதி (வயது 78). இவர் தனது உறவினர் பாண்டியன் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லீலாவதி திடீரென மாயமனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசிந்தலைசேரியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணபெருமாள் (21). இவர் சம்பவத்தன்று தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×