என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் மாயம்
- தேனி அருகே பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கலைஞர் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது36). இவர் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக தனது தந்தையிடம் கூறி சென்ற தினேஷ்குமார் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்ைல. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி தனியார் மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது51). பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகள் ஒடிசியா (17). சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்