search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 பேர் பலி"

    ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:

    1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

    2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

    3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

    4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

    5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

    6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

    7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

    8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

    9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

    10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

    11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

    12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

    13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

    14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.



    15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

    16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

    17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

    18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.

    19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

    20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

    22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

    23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

    25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

    26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

    27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

    நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சிங்கப்பூரின் டிரம்ப் - கிம் சந்திப்புக்காக 81.50 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது 12 மில்லியன் அமெரிக்க டாலராகும். முதலில் கணிக்கப்பட்ட தொகையை விட சற்று குறைவாகும் என தெரிவித்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    வங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain
    டாக்கா:

    வங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  #BangladeshRain
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளன.

    கடந்த 22, 23-ந் தேதிகளில் நடந்த கலவர காட்சிகள் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. சுமார் 500 புகைப்படங்கள், தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்களை அழைத்து வந்து புகைப்படங்களை காண்பித்து வருகின்றனர்.

    இதன்மூலம் ஏராளமானவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் அடையாளம் கண்டறியப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

    அதன்படி போராட்டங்களை முன்னின்று நடத்திய 9 பேரை பிடித்து போலீஸ் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மதுரையை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பிடித்து வந்துள்ளனர்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாலும் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியை ஒரு நாள் கலெக்டராக்கி மாவட்ட நிர்வாகம் கவுரவித்துள்ளது. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவரது எதிர்கால விருப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவரை தன் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.

    இதுதொடர்பாக, கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வந்தனா குமாரி, தான் கலெக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசையை ஊக்குவிக்க முடிவு செய்தோம். எனவே, அவரை ஒரு நாள் கலெக்டராக என் இருக்கையில் அமர வைத்தேன். அங்கு அவர் சில பணிகளை மேற்பார்வையிட்டார் என தெரிவித்தார்.

    முதலிடம் பிடித்த மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ஜம்மு-காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதற்காக அந்த அமைப்பின் 12 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த 12 பயங்கரவாதிகளும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள்.

    காஷ்மீரில் நாளை (சனிக்கிழமை) 2 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு அந்த 12 பயங்கரவாதிகளும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் அவர்கள் கைவரிசை காட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஒருவேளை நாளை தாக்குதல் நடத்த முடியாவிட்டால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற
    பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி உளவுத் துறை அமைப்பினர் மத்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளனர்.

    நாளை ரம்ஜான் நோன் பின் 17-வது நாளாகும். கடந்த ஆண்டு இதே தினத்தன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினார்கள். அதே போன்றும் இந்த ஆண்டும் தாக்குதலுக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர்.

    இந்த திட்டத்திற்காக கடந்த புதன்கிழமை 12 பயங்கரவாதிகளும் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அந்த அமைப்பின் 8 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காஷ்மீரில் பதுங்கி இருக்கிறார்கள் என்று ஏற்கனவே உளவுத்துறை கூறி உள்ளது. இந்த 20 பயங்கரவாதிகளும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய அரசு அலுவலகங்களில் துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதவிர துணைநிலை ராணுவத்தினர் கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    விளம்பி ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மேஷம் - முருகன்
    ரிஷபம் - பார்வதிதேவி
    மிதுனம் - துர்க்கை, நவக்கிரகங்கள்
    கடகம் - விநாயகர்
    சிம்மம் - ஸ்ரீகிருஷ்ணர்
    கன்னி - சிவபெருமான்
    துலாம் - ஸ்ரீராமர்
    விருச்சிகம் - மகாலட்சுமி
    தனுசு - சனீஸ்வரர்
    மகரம் - அனுமன்
    கும்பம் - பைரவர்
    மீனம் - சிவபெருமான்
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னா, தனது வெற்றியில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் கடினமாக உழைத்ததாகவும் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்று அசத்தியுள்ளார். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் தனது சாதனை குறித்து மேக்னா கூறியதாவது:-

    நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் முதலிடத்தைப் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு மதிப்பெண் பெற்றதில் எந்த ரகசியமும் இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும். நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிப்பேன் என எண்ணிப் பார்த்தது கிடையாது.

    எனது ஆசிரியர்களும் பெற்றோரும் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தனர். படிக்கும் விஷயத்தில் ஒருபோதும் அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult #CBSEChennaiRecord
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை தென் மாநில மண்டலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. 93.87 சதவீத தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்தையும், டெல்லி 89 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult #CBSEChennaiRecord
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.

    காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. #CBSEresults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். 

    இந்த தேர்வில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.



    இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் கூறுகையில், மாணவ-மாணவியர் கூகுளில் தங்களின் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. #CBSEresults
    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். #CBSEresults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 வகுப்பு தேர்வு எழுதினர்.

    12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். மாணவ-மாணவியர் கூகுளில் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணையதளங்களிலும் வெளியிடப்படும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. #CBSEresults

    ×