search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 பேர் பலி"

    மத்திய அமெரிக்காவில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். #CentralAmericaRain
    ஹோண்டுராஸ்:

    மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்கிறது.

    இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தகவல் தொடர்பு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை பாதிப்பு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் அவசரகால பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    மழை மற்றும் நிலச்சரிவினால் ஹோண்டுராஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  நீர்வழிப்பாதைகள் மற்றும் மலைப்பகுதியில் அபாயகரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #CentralAmericaRain
    வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SSLC #PlusOne #PlusTwo
    சென்னை:

    கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.



    இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.

    இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.

    அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.  #SSLC #PlusOne #PlusTwo
    எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். #EthiopiaLandslide
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



    மாவட்ட காவல்துறை தலைவர் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

    எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் குப்பைமேடு சரிந்ததில் 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #EthiopiaLandslide 
    ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். #Accident
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். 

    பால்க் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். #Accident
    கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். #KeralaFloods #KeralaRatFever
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 483 பேர் உயிரிழந்துள்ளனர்.



    தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன. குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த காய்ச்சலுக்கு இன்று வரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறி உள்ளார். #KeralaFloods #KeralaRatFever
    பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைவதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

    இதே போன்று விரைவில் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு கண் பார்வை குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்கு பரிசோதனை செய்து கண் குறைபாடிற்கான சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
    பாகிஸ்தானில் 9 குழந்தைகளை கற்பழித்து, அவற்றில் 4 குழந்தைகளை கொன்ற காமுகனுக்கு 13 மரண தண்டனைகளுடன் ஏராளமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.#DeathSentence
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு லாகூர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

    தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதில் 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதும் தெரிந்தது.



    இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு முதல் நேரடியாக பி.எட் பட்டப்படிப்பில் சேரும் வகையில் தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #MonsoonSession
    புதுடெல்லி:

    தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்.

    பாராளுமன்றத்தில் இதன் மீதான இன்றைய விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார். 

    ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
    கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மும்பை:

    மும்பையில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் பல கடற்கரைகளில் அலைகள் மூலம் குப்பைகள் வெளியேறின. இதனால் கரையோர பகுதிகள் குப்பை மேடுகள் போல காட்சி அளித்தன.

    கடலில் குப்பைகள் வீசப்படும் பிரச்சினையில் உரிய விதிமுறையை வகுக்கக்கோரி அரசு சாரா அமைப்பு சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று நீதிபதிகள் ஓகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறின. இதையடுத்து கடற்கரை பகுதியை மாநகராட்சியினர் சுத்தப்படுத்தி விட்டனர் என்று தெரிவித்தார்.

    இது முக்கியமான பிரச்சினை என்பதால், இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். 
    27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
    இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். அந்த இயற்கை வழிபாட்டில் முக்கியமான ஒன்றுதான் ‘விருட்ச வழிபாடு’ என்னும் மர வழிபாடு. இதற்கு ஆதாரம் தரும் விதமாக ஆலயம் தோறும் ஒவ்வொரு தல விருட்சம் இருப்பதை இப்போதும் காண முடியும். அது மட்டுமின்றி 27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரும் மரம் என்றுதான் சில கோவில்களில் வைத்திருப்பார்கள். அதைத் தான் பக்தர்கள் பலரும் வழிபட்டு வருவார்கள். ஆனால் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அவற்றில் ஒவ்வொரு பாதத்திற்கும் உரிய விருட்சம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கான பொதுவான மரத்தை வழிபடுவதை விட, அந்த நட்சத்திரத்தில் தாங்கள் பிறந்த பாதத்திற்கான விருட்சத்தை தேர்வு செய்து வழிபட்டால் கூடுதல் பலனைத் தரும்.

    இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உள்ள நான்கு பாதத்திற்கான விருட்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    அஸ்வினி

    1-ம் பாதம் - காஞ்சிதை

    (எட்டி)

    2-ம் பாதம் - மகிழம்
    3-ம் பாதம் - பாதாம்
    4-ம் பாதம் - நண்டாஞ்சு

    பரணி

    1-ம் பாதம் - அத்தி
    2-ம் பாதம் - மஞ்சக்கடம்பு
    3-ம் பாதம் - விளா
    4-ம் பாதம் - நந்தியா வட்டை

    கார்த்திகை

    1-ம் பாதம் - நெல்லி
    2-ம் பாதம் - மணிபுங்கம்
    3-ம் பாதம் - வெண் தேக்கு
    4-ம் பாதம் - நிரிவேங்கை

    ரோகிணி

    1-ம் பாதம் - நாவல்
    2-ம் பாதம் - சிவப்பு

    மந்தாரை

    3-ம் பாதம் - மந்தாரை
    4-ம் பாதம் - நாகலிங்கம்

    மிருகசீரிஷம்

    1-ம் பாதம் - கருங்காலி
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - வேம்பு
    4-ம் பாதம் - நீர்க்கடம்பு

    திருவாதிரை

    1-ம் பாதம் - செங்கருங்காலி
    2-ம் பாதம் - வெள்ளை
    3-ம் பாதம் - வெள்ளெருக்கு
    4-ம் பாதம் - வெள்ளெருக்கு

    புனர்பூசம்

    1-ம் பாதம் - மூங்கில்
    2-ம் பாதம் - மலைவேம்பு
    3-ம் பாதம் - அடப்பமரம்
    4-ம் பாதம் - நெல்லி

    பூசம்

    1-ம் பாதம் - அரசு
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - இருள்
    4-ம் பாதம் - நொச்சி

    ஆயில்யம்

    1-ம் பாதம் - புன்னை
    2-ம் பாதம் - முசுக்கட்டை
    3-ம் பாதம் - இலந்தை
    4-ம் பாதம் - பலா

    மகம்

    1-ம் பாதம் - ஆலமரம்
    2-ம் பாதம் - முத்திலா மரம்
    3-ம் பாதம் - இலுப்பை
    4-ம் பாதம் - பவளமல்லி

    பூரம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - வாகை
    3-ம் பாதம் - ருத்திராட்சம்
    4-ம் பாதம் - பலா

    உத்திரம்

    1-ம் பாதம் - ஆலசி
    2-ம் பாதம் - வாதநாராயணன்
    3-ம் பாதம் - எட்டி
    4-ம் பாதம் - புங்கமரம்

    ஹஸ்தம்

    1-ம் பாதம் - ஆத்தி
    2-ம் பாதம் - தென்னை
    3-ம் பாதம் - ஓதியன்
    4-ம் பாதம் - புத்திரசீவி

    சித்திரை

    1-ம் பாதம் - வில்வம்
    2-ம் பாதம் - புரசு
    3-ம் பாதம் - கொடுக்காபுளி
    4-ம் பாதம் - தங்க அரளி

    சுவாதி

    1-ம் பாதம் - மருது
    2-ம் பாதம் - புளி
    3-ம் பாதம் - மஞ்சள் கொன்றை
    4-ம் பாதம் - கொழுக்கட்டை

    மந்தாரை

    விசாகம்

    1-ம் பாதம் - விளா
    2-ம் பாதம் - சிம்சுபா
    3-ம் பாதம் - பூவன்
    4-ம் பாதம் - தூங்குமூஞ்சி

    அனுஷம்

    1-ம் பாதம் - மகிழம்
    2-ம் பாதம் - பூமருது
    3-ம் பாதம் - கொங்கு
    4-ம் பாதம் - தேக்கு

    கேட்டை

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - பூவரசு
    3-ம் பாதம் - அரசு
    4-ம் பாதம் - வேம்பு

    மூலம்

    1-ம் பாதம் - மராமரம்
    2-ம் பாதம் - பெரு
    3-ம் பாதம் - செண்பக மரம்
    4-ம் பாதம் - ஆச்சா

    பூராடம்

    1-ம் பாதம் - வஞ்சி
    2-ம் பாதம் - கடற்கொஞ்சி
    3-ம் பாதம் - சந்தானம்
    4-ம் பாதம் - எலுமிச்சை

    உத்திராடம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - கடுக்காய்
    3-ம் பாதம் - சாரப்பருப்பு
    4-ம் பாதம் - தாளை

    திருவோணம்

    1-ம் பாதம் - வெள்ளெருக்கு
    2-ம் பாதம் - கருங்காலி
    3-ம் பாதம் - சிறுநாகப்பூ
    4-ம் பாதம் - பாக்கு

    அவிட்டம்

    1-ம் பாதம் - வன்னி
    2-ம் பாதம் - கருவேல்
    3-ம் பாதம் - சீத்தா
    4-ம் பாதம் - ஜாதிக்காய்

    சதயம்

    1-ம் பாதம் - கடம்பு
    2-ம் பாதம் - பரம்பை
    3-ம் பாதம் - ராம்சீதா
    4-ம் பாதம் - திலகமரம்

    பூரட்டாதி

    1-ம் பாதம் - தேமா
    2-ம் பாதம் - குங்கிலியம்
    3-ம் பாதம் - சுந்தரவேம்பு
    4-ம் பாதம் - கன்னிமந்தாரை

    உத்திரட்டாதி

    1-ம் பாதம் - வேம்பு
    2-ம் பாதம் - குல்மோகர்
    3-ம் பாதம் - சேராங்

    கொட்டை

    4-ம் பாதம் - செம்மரம்

    ரேவதி

    1-ம் பாதம் - பனை
    2-ம் பாதம் - தங்க அரளி
    3-ம் பாதம் - செஞ்சந்தனம்
    4-ம் பாதம் - மஞ்சபலா

    இவற்றில் உங்கள் நட்சத்திரத்தின் பாதங்களுக்குரிய மரத்தை அறிந்து வழிபடுவது உங்கள் வாழ்வை சிறப்பாக்கும். மேலும் அந்த மரத்தின் செடியை ஏதாவது ஒரு ஆலயத்தில் நீங்களே உங்கள் கையால் நட்டு வைப்பதும் நன்மை பயக்கும். அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளர்ச்சி பெறும். உங்கள் நட்சத்திரங்களுக்குரிய மரமானது, உங்களின் பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

    கடகம் ராமசாமி
    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி பலியாகினர். #Pakistan #SuicideAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

    இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
     
    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistan #SuicideAttack
    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏற்பட்ட தீயை, 58 தீயணைப்பு துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட போல்கால்கள் வந்துள்ளது. இதையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

    அவர்கள் அங்கு செல்வதற்குள் கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின் பால்கனி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ×