search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 பேர் பலி"

    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.
    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.

    கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

    திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

    துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

    கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

    இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

    மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.

    12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

    கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

    திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

    துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

    கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

    மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

    சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

    2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

    ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

    அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

    கல்பங்களின் விவரம் :

    1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.

    கடகம் ராமசாமி
    ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.
    பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

    பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும்.

    ஏன் சில நேரங்களில் ஜாதகம் உள்ளவர்களுக்கும் கூட இந்த பிரசன்ன முறை என்பது இன்றியமையாததாக ஆகின்றது.

    அது எப்படி என்று பார்ப்போம்.. உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் ஜோதிடரிடம் சென்று, தான் இருக்கும் வேலையை விட்டு சொந்த தொழிலில் இறங்கலாமா? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம்.

    ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது உத்தியோகத்தையும், 7-ம் பாவம் என்பது சொந்தத் தொழிலையும் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது 2, 4, 6, 10 போன்ற புறம் சார்ந்த பாவங்களை அல்லது புறத்தை கெடுக்காத பாவங்களை தொடர்பு கொண்டு வலுவான அமைப்பில் இருக்கின்றதோ அது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதே சிறந்ததாகும்.

    ஒரு வேளை விதியின் படி இவ்விரு பாவங்களும் சம வலுவுடன் இருந்து, மதி என்கிற நடப்பு தசாநாதன் இவ்விரு பாவங்களில் ஏதாவது ஒன்றை பார்க்கவில்லை எனில், இவ்விரண்டில் எதை செய்தாலும் பெரிய வித்தியாசம் வராது என்பதே இங்கு அர்த்தமாகும். ஆனால் ஜோதிடர் இதை ஆதாரமாகக் கொண்டு உத்தியோகம் அல்லது சொந்தத் தொழில் இவற்றில் எதை செய்தாலும் உனக்கு நன்மையே என்று கூறும் பொழுது, ஜாதகர் மேலும் குழப்பமடையக்கூடும். ஆதலால் இவ்விரண்டில் எதை செய்யலாம் என்று உறுதியாக கூறினால் தான் ஜாதகரின் சந்தேகம் தீரும்படியாக இருக்கும்.

    இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரசன்னம் மூலமாக, மேற்கூறிய இரண்டில் எதை செய்தால் அதீத நன்மை என்பதை, உறுதியாக கூறிவிடலாம். ஆக ஜாதகம் உள்ளவர்களுக்கும் இது போன்ற சமயங்களில் பிரசன்னம் அவசியமாகின்றது.

    மிக மிக குறுகிய கால இடைவெளியில் அரங்கேறும் சம்பவங்களையும், ஒரே நாளில் அரங்கேறும் சம்பவங் களையும் ஜனன ஜாதகத்தில் உள்ள விதி மற்றும் மதியை கொண்டு நிர்ணயம் செய்வது என்பது சற்று கடினமான காரியம் ஆகும்.

    ஆனால் பிரசன்ன ஜோதிடத்தில் இது எளிது. குறிப்பாக... ‘இன்று நடைபெற இருக்கும் மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் நான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்குமா?’, ‘வங்கியில் விண்ணப்பித்த கடன் எப்போது ஒப்புதல் ஆகும்?’, ‘இன்று பள்ளியில் நடக்க இருக்கும் பேச்சு போட்டியில் நான் வெற்றி பெறுவேனா?’, ‘வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரெயில் டிக்கெட் காத்திருப்பு வரிசையில் இருந்து உறுதி செய்யப்படுமா?’, ‘இன்று எனது நண்பர் எத்தனை மணிக்கு என் வீட்டிற்கு வருவார்?’, ‘திருடு போன அல்லது காணாமல் போன பணம், பொருள் திரும்ப கிடைக்குமா?’ என்பது போன்ற ஜாதகரின் யதார்த்தமான கேள்விகள், இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலமாக மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.



    ஒரு சில விநாடி இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை கூட, உப நட்சத்திர கோட்பாட்டின் மூலம் மிக அழகாக வேறுபடுத்தி, பின் அதற்கான பலனை தனித்தன்மையுடன் கூறுவதே உயர் கணித சார ஜோதிடத்தின் சிறப்பம்சமாகும். இதே உப நட்சத்திர கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் பிரசன்ன ஜாதகமும் கணிக்கப் படுகிறது.

    கிரக நிலைகளையும், பன்னிரு பாவ நிலை களையும் பற்றி தெரிவிப்பது ஜாதகம். ஜோதிடரிடம், பிரசன்னம் பார்ப்பதற்காக வருபவரின் மனதில் இருந்து கேள்வி எப்போது உதயமாகின்றதோ; அந்த குறிப்பிட்ட நேரத்தின் போது வான்மாண்டலத்தில் உள்ள கிரக நிலைகளே பிரசன்ன ஜாதகத்தில் இடம்பெறும். ஆனால் லக்னப் புள்ளியை பொறுத்து வேறுபடும் பாவ நிலைகள் என்பது, கேள்வி உதயமான நேரத்தை கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர் குறிப்பிடும் எண்ணை (1 - 249) பொருத்து கணக்கிடப்படுகின்றது.

    வான்மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும், மொத்தம் 249 உபபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆக 360 பாகையைக் கொண்ட வான்மண்டலம் என்பது 249 உபநட்சத்திரங்களை கொண்டது ஆகும். இந்த 249 உபநட்சத்திர பிரிவுகளையும், 1 முதல் 249 வரை உள்ள வரிசை எண்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

    பிரசன்ன ஜோதிடர், வாடிக்கையாளரிடம் 1 முதல் 249 உள்ள எண்களில் ஏதாவது ஒரு எண்ணை குறிப்பிடுமாறு கூறுவார். வாடிக்கையாளர் எந்த எண்ணை குறிப்பிடுகின்றாரோ அந்த எண்ணிற்குரிய உபநட்சத்திரமே லக்ன பாவ உபநட்சத்திரமாக அமையும். அதாவது அந்த எண்ணின் வரிசைக்குரிய உபநட்சத்திரத்தின் பாகையே, லக்ன ஆரம்ப முனையின் பாகையாக நிர்ணயம் செய்யப்படும். பின்னர் அந்த லக்ன புள்ளியை மையமாகக் கொண்டு, மற்ற பதினொரு பாவங்களின் ஆரம்ப முனைகள் கணக்கிடப்பட்டு பிரசன்ன ஜாதகம் கணிதம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு எண்ணை பெற்று, பிரசன்ன ஜாதகத்தின் லக்னத்தை தீர்மானிப்பதில் ஒரு சூட்சுமம் உள்ளது. பொதுவாக ஜோதிடத்தில் லக்ன பாவம் என்பது ஜாதகர் ஒரு செயலில் ஈடுபடும் தன்மையையும், ஜாதகரின் எண்ண ஓட்டங்களையும் (சிந்தனை) குறிக்கும். ஆக பிரசன்ன ஜோதிடத்தில் ஜாதகர் தெரிவிக்கும் எண்ணானது, அவர் நினைத்த அந்த செயலைக் குறிக்கும். மேலும் அந்த செயல் நிறைவேறுமா.. நிறைவேறாதா? அப்படி நிறைவேறும் எனில் எப்போது நிறைவேறும்? என்று தெரிவிப்பது, ஜோதிடரிடம் வாடிக்கையாளர் கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கிரக நிலைகளே ஆகும்.

    வரைமுறைகள்

    பிரசன்ன ஜோதிடத்திற்கு என்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

    * பிரசன்னத்தின் மூலமாக நாம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் இருந்தால் அத்தனை முறை பிரசன்னம் பார்க்கப்பட வேண்டும்.

    * பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் யாவும் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?, வீராட் கோலி சதமடிப்பாரா? போன்ற பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னத்தின் மூலமாக தீர்வு காண முடியாது.

    * பிரசன்னத்தில் ஜாதகர் நேரிடையாக தமக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ கேள்விகளை முன் வைக்கலாம். அப்போது தான் பிரசன்னம் பலிதம் ஆகும்.

    கடகம் ராமசாமி
    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    சென்னை:

    மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. 

    இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிகின்றன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். #BrazilBankRobbery
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.



    பின்னர் போலீசாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணைக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடினர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். #BrazilBankRobbery
    ஜிம்பாப்வே நாட்டில் கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6ம் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15ம் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #Zimbabwe #BusAccident
    உத்தரகாண்டில் சாலை வளைவில் இருந்த பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #BusAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    தம்டா பகுதியில் வந்தபோது, அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
     
    விபத்து குறித்து அறிந்த மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், மீட்புப் பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #BusAccident
    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #ISIS
    பாக்தாத்:

    ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள்.

    ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த இடங்களை மீட்பதற்காக ஈராக் ராணுவம் அமெரிக்கா உதவியுடன் போராடியது. சில மாதங்களுக்கு முற்றிலும் மீட்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் மட்டும் சில பகுதிகளை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்.

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த பகுதிகளில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 200 இடங்களில் புதை குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது புதை குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர்.

    நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த புதைக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 புதைகுழிகளிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது. பல இடங்களில் புதைகுழிகள் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. புதைகப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    காணாமல் போனவர்கள் யார்? அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். #ISIS
    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     


    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று  கிளர்ச்சியாளர்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தருமபுரி:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.சி.பி.எஸ். திட்ட ஊதிய விகிதத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைமுறை படுத்த வேண்டும், பயணப்படியை (எப்.டி.ஏ) அடிப்படை ஊதியத்தை 5 சதவீகிதம் வழங்கப்பட வேண்டும், மடிக்கணினி வழங்கப்படாத அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடி மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இன்னால், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.
    டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #TitliCyclone #OdishaRain #Landslide
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கஜபதி மாவட்டம் பாரகாரா கிராமத்தில் நேற்று இடைவிடாமல் மழைபெய்ததால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.



    நிலச்சரிவு நடந்த பகுதியில் மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட உள்ளார். #TitliCyclone #OdishaRain #Landslide
    மத்திய அமெரிக்காவில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். #CentralAmericaRain
    ஹோண்டுராஸ்:

    மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்கிறது.

    இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தகவல் தொடர்பு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை பாதிப்பு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் அவசரகால பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    மழை மற்றும் நிலச்சரிவினால் ஹோண்டுராஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  நீர்வழிப்பாதைகள் மற்றும் மலைப்பகுதியில் அபாயகரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #CentralAmericaRain
    வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SSLC #PlusOne #PlusTwo
    சென்னை:

    கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.



    இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.

    இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.

    எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.

    அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.  #SSLC #PlusOne #PlusTwo
    ×