search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எத்தியோப்பியாவில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு
    X

    எத்தியோப்பியாவில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

    எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். #EthiopiaLandslide
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



    மாவட்ட காவல்துறை தலைவர் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

    எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் குப்பைமேடு சரிந்ததில் 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #EthiopiaLandslide 
    Next Story
    ×