search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "27 nakshatra"

    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    ‘ஆதிரை, பரணி, கார்த்திகை
    ஆயில்யம், முப்பூரம், கேட்டை
    தீதரு விசாகம் ஜோதி
    சித்திரை மகம் எராரும்
    மாதனம் கொண்டார் தாரார்
    வழிநடைப் பட்டார் மீளார்
    பாய்தனில் படுத்தோர் தேரார்
    பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.

    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
    இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். அந்த இயற்கை வழிபாட்டில் முக்கியமான ஒன்றுதான் ‘விருட்ச வழிபாடு’ என்னும் மர வழிபாடு. இதற்கு ஆதாரம் தரும் விதமாக ஆலயம் தோறும் ஒவ்வொரு தல விருட்சம் இருப்பதை இப்போதும் காண முடியும். அது மட்டுமின்றி 27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரும் மரம் என்றுதான் சில கோவில்களில் வைத்திருப்பார்கள். அதைத் தான் பக்தர்கள் பலரும் வழிபட்டு வருவார்கள். ஆனால் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அவற்றில் ஒவ்வொரு பாதத்திற்கும் உரிய விருட்சம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கான பொதுவான மரத்தை வழிபடுவதை விட, அந்த நட்சத்திரத்தில் தாங்கள் பிறந்த பாதத்திற்கான விருட்சத்தை தேர்வு செய்து வழிபட்டால் கூடுதல் பலனைத் தரும்.

    இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உள்ள நான்கு பாதத்திற்கான விருட்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    அஸ்வினி

    1-ம் பாதம் - காஞ்சிதை

    (எட்டி)

    2-ம் பாதம் - மகிழம்
    3-ம் பாதம் - பாதாம்
    4-ம் பாதம் - நண்டாஞ்சு

    பரணி

    1-ம் பாதம் - அத்தி
    2-ம் பாதம் - மஞ்சக்கடம்பு
    3-ம் பாதம் - விளா
    4-ம் பாதம் - நந்தியா வட்டை

    கார்த்திகை

    1-ம் பாதம் - நெல்லி
    2-ம் பாதம் - மணிபுங்கம்
    3-ம் பாதம் - வெண் தேக்கு
    4-ம் பாதம் - நிரிவேங்கை

    ரோகிணி

    1-ம் பாதம் - நாவல்
    2-ம் பாதம் - சிவப்பு

    மந்தாரை

    3-ம் பாதம் - மந்தாரை
    4-ம் பாதம் - நாகலிங்கம்

    மிருகசீரிஷம்

    1-ம் பாதம் - கருங்காலி
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - வேம்பு
    4-ம் பாதம் - நீர்க்கடம்பு

    திருவாதிரை

    1-ம் பாதம் - செங்கருங்காலி
    2-ம் பாதம் - வெள்ளை
    3-ம் பாதம் - வெள்ளெருக்கு
    4-ம் பாதம் - வெள்ளெருக்கு

    புனர்பூசம்

    1-ம் பாதம் - மூங்கில்
    2-ம் பாதம் - மலைவேம்பு
    3-ம் பாதம் - அடப்பமரம்
    4-ம் பாதம் - நெல்லி

    பூசம்

    1-ம் பாதம் - அரசு
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - இருள்
    4-ம் பாதம் - நொச்சி

    ஆயில்யம்

    1-ம் பாதம் - புன்னை
    2-ம் பாதம் - முசுக்கட்டை
    3-ம் பாதம் - இலந்தை
    4-ம் பாதம் - பலா

    மகம்

    1-ம் பாதம் - ஆலமரம்
    2-ம் பாதம் - முத்திலா மரம்
    3-ம் பாதம் - இலுப்பை
    4-ம் பாதம் - பவளமல்லி

    பூரம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - வாகை
    3-ம் பாதம் - ருத்திராட்சம்
    4-ம் பாதம் - பலா

    உத்திரம்

    1-ம் பாதம் - ஆலசி
    2-ம் பாதம் - வாதநாராயணன்
    3-ம் பாதம் - எட்டி
    4-ம் பாதம் - புங்கமரம்

    ஹஸ்தம்

    1-ம் பாதம் - ஆத்தி
    2-ம் பாதம் - தென்னை
    3-ம் பாதம் - ஓதியன்
    4-ம் பாதம் - புத்திரசீவி

    சித்திரை

    1-ம் பாதம் - வில்வம்
    2-ம் பாதம் - புரசு
    3-ம் பாதம் - கொடுக்காபுளி
    4-ம் பாதம் - தங்க அரளி

    சுவாதி

    1-ம் பாதம் - மருது
    2-ம் பாதம் - புளி
    3-ம் பாதம் - மஞ்சள் கொன்றை
    4-ம் பாதம் - கொழுக்கட்டை

    மந்தாரை

    விசாகம்

    1-ம் பாதம் - விளா
    2-ம் பாதம் - சிம்சுபா
    3-ம் பாதம் - பூவன்
    4-ம் பாதம் - தூங்குமூஞ்சி

    அனுஷம்

    1-ம் பாதம் - மகிழம்
    2-ம் பாதம் - பூமருது
    3-ம் பாதம் - கொங்கு
    4-ம் பாதம் - தேக்கு

    கேட்டை

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - பூவரசு
    3-ம் பாதம் - அரசு
    4-ம் பாதம் - வேம்பு

    மூலம்

    1-ம் பாதம் - மராமரம்
    2-ம் பாதம் - பெரு
    3-ம் பாதம் - செண்பக மரம்
    4-ம் பாதம் - ஆச்சா

    பூராடம்

    1-ம் பாதம் - வஞ்சி
    2-ம் பாதம் - கடற்கொஞ்சி
    3-ம் பாதம் - சந்தானம்
    4-ம் பாதம் - எலுமிச்சை

    உத்திராடம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - கடுக்காய்
    3-ம் பாதம் - சாரப்பருப்பு
    4-ம் பாதம் - தாளை

    திருவோணம்

    1-ம் பாதம் - வெள்ளெருக்கு
    2-ம் பாதம் - கருங்காலி
    3-ம் பாதம் - சிறுநாகப்பூ
    4-ம் பாதம் - பாக்கு

    அவிட்டம்

    1-ம் பாதம் - வன்னி
    2-ம் பாதம் - கருவேல்
    3-ம் பாதம் - சீத்தா
    4-ம் பாதம் - ஜாதிக்காய்

    சதயம்

    1-ம் பாதம் - கடம்பு
    2-ம் பாதம் - பரம்பை
    3-ம் பாதம் - ராம்சீதா
    4-ம் பாதம் - திலகமரம்

    பூரட்டாதி

    1-ம் பாதம் - தேமா
    2-ம் பாதம் - குங்கிலியம்
    3-ம் பாதம் - சுந்தரவேம்பு
    4-ம் பாதம் - கன்னிமந்தாரை

    உத்திரட்டாதி

    1-ம் பாதம் - வேம்பு
    2-ம் பாதம் - குல்மோகர்
    3-ம் பாதம் - சேராங்

    கொட்டை

    4-ம் பாதம் - செம்மரம்

    ரேவதி

    1-ம் பாதம் - பனை
    2-ம் பாதம் - தங்க அரளி
    3-ம் பாதம் - செஞ்சந்தனம்
    4-ம் பாதம் - மஞ்சபலா

    இவற்றில் உங்கள் நட்சத்திரத்தின் பாதங்களுக்குரிய மரத்தை அறிந்து வழிபடுவது உங்கள் வாழ்வை சிறப்பாக்கும். மேலும் அந்த மரத்தின் செடியை ஏதாவது ஒரு ஆலயத்தில் நீங்களே உங்கள் கையால் நட்டு வைப்பதும் நன்மை பயக்கும். அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளர்ச்சி பெறும். உங்கள் நட்சத்திரங்களுக்குரிய மரமானது, உங்களின் பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

    கடகம் ராமசாமி
    ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:

    1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

    2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

    3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

    4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

    5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

    6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

    7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

    8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

    9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

    10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

    11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

    12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

    13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

    14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.



    15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

    16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

    17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

    18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.

    19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

    20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

    22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

    23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

    24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

    25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

    26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

    27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

    நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.
    ×