search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debris"

    • ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்கிடையே தேடுதல் தொடர்கிறது
    • புலந்தர் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது

    மொராக்கோவில் இம்மாதம் 8-ஆம் தேதியன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஒரு கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதில் தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், இடிபாடுகளுக்கிடையே இன்னும் தேடுதல் தொடர்கிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை புதையுண்டிருப்பதையும், அதனை வெளியே ஒருவர் எடுப்பதும் தெரிகிறது. இக்குழந்தை மொராக்கோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டு இறந்த குழந்தை என ஒரு தகவலும் அந்த வீடியோவில் இடம் பெறுகிறது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள மூசா நகர் பகுதியில் புலந்தர் கிராமத்தில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட ராஜேஷ், ரேஷ்மா எனும் தம்பதியினர் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த ஒரு குழந்தை பூமியில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனே அதனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

    குழந்தையை புதைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, மொராக்கோ நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தபட்டு தவறாக சித்தரித்து இணையத்தில் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூர் ஊராட்சி உள்ளது. இது பெரிய ஊராட்சி என்பதால் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் குப்பைகள் அதே பகுதியில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது. இங்கு வரும் கால்நடைகள் குப்பைகளை கிளறி தங்களுக்கு தேவையான உணவுகளை உட்கொண்டு வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மக்காமல் சிதறி கிடக்கின்றது.

    அவ்வழியே வாகனத்தில் செல்வோர் மீது காற்றில் பறந்து பிளாஸ்டிக் குப்பைகள் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இது மட்டும் இன்றி அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் வகையில் துர்நாற்றம் வீசி வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி சுகாதாரத்தை பேணிக்காத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது
    • இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது

    520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

    இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

    "உக்ரேனிய ஏவுகணைகளை ரஷிய வான் பாதுகாப்பு கருவிகள் கண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது. சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் S-200 ஏவுகணை செலுத்தப்பட்டது.

    இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது. இதனை வீழ்த்தியபோது அதன் பாகங்கள், மக்கள் இல்லாத பகுதியில் விழுந்தது", என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் எல்லை பகுதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன. ஆனால் நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை.

    "மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் லேசாக காயமடைந்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    அந்த ஓட்டலில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் உள்ள கலை அருங்காட்சியகத்திற்கு மேல் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் அருங்காட்சியகச் சுவர், அதன் கூரை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதன் தாக்கத்தால் அருகில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் பிரேம்கள் சேதமடைந்தன" என இச்சம்பவம் குறித்து ரோஸ்டோவ் பிராந்திய ஆளுனர் வாசிலி கோலுபேவ் தெரிவித்தார்.

    உக்ரைன் நகரின் எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அசோவ் கடற்கரை அருகே டேகன்ராக் நகரம் அமைந்துள்ளது.

    • ராமநாதபுர நீர்நிலைகளில் இறைச்சி கழிவு-குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடை பெற்றது. துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வரு மாறு:-

    கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் பேசுகையில், எனது வார்டில் தொன்னை குருசாமி கோவில் தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணி முடிவடைந்து ஒரு பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. அங்கும் பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பள்ளிவாசல் அருகே ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை அகற்றி அகலப்படுத்த வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

    சேர்மன்:- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அகற்றி சாலை அகலப்படுத்தப்படும்.

    கவுன்சிலர் மணி கண்டன்:- கிடா வெட்டு ஊரணி, பாணங்குண்டு ஊருணி, வண்ணர்ஊரணி, முகவை ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரால், பலரும் தினமும், வித, விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். நிலத்தடி நீரும் மாசுப்படும் நிலை தொடர்கிறது. நகரின் நிலத்தடி நீர் கடுமையான உவர்ப்புத் தன்மை ஏற்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாழ்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தி யாகி,பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகளில் குப்பை, கோழி, மாமிச கழிவு களையும் கொட்டுகின்ற னர். இதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும்.

    இதற்கு நகராடசி தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். ஊருணிகளில் கோழி, இறைச்சி கழிவுகள், குப்பைகள் போடுபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    இதேபோல் ரமேஷ், குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். அப்போது கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறை வேற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். பின்னர் பல்வேறு தீர்மானங் கள் நிைறவேற்றப்பட்டன.

    கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதியதால் ஏற்பட்ட விபத்தை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #InternationalSpaceStation
    வாஷிங்டன்:

    விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற்கட்டமாக அடைத்துவிட்டு, தற்போது முழுமையாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.

    2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மையத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #InternationalSpaceStation
    கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மும்பை:

    மும்பையில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் பல கடற்கரைகளில் அலைகள் மூலம் குப்பைகள் வெளியேறின. இதனால் கரையோர பகுதிகள் குப்பை மேடுகள் போல காட்சி அளித்தன.

    கடலில் குப்பைகள் வீசப்படும் பிரச்சினையில் உரிய விதிமுறையை வகுக்கக்கோரி அரசு சாரா அமைப்பு சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று நீதிபதிகள் ஓகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறின. இதையடுத்து கடற்கரை பகுதியை மாநகராட்சியினர் சுத்தப்படுத்தி விட்டனர் என்று தெரிவித்தார்.

    இது முக்கியமான பிரச்சினை என்பதால், இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். 
    ×