search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை
    X

    நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

    நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை

    • ராமநாதபுர நீர்நிலைகளில் இறைச்சி கழிவு-குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடை பெற்றது. துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வரு மாறு:-

    கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் பேசுகையில், எனது வார்டில் தொன்னை குருசாமி கோவில் தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணி முடிவடைந்து ஒரு பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. அங்கும் பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பள்ளிவாசல் அருகே ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை அகற்றி அகலப்படுத்த வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

    சேர்மன்:- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அகற்றி சாலை அகலப்படுத்தப்படும்.

    கவுன்சிலர் மணி கண்டன்:- கிடா வெட்டு ஊரணி, பாணங்குண்டு ஊருணி, வண்ணர்ஊரணி, முகவை ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரால், பலரும் தினமும், வித, விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். நிலத்தடி நீரும் மாசுப்படும் நிலை தொடர்கிறது. நகரின் நிலத்தடி நீர் கடுமையான உவர்ப்புத் தன்மை ஏற்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாழ்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தி யாகி,பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகளில் குப்பை, கோழி, மாமிச கழிவு களையும் கொட்டுகின்ற னர். இதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும்.

    இதற்கு நகராடசி தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். ஊருணிகளில் கோழி, இறைச்சி கழிவுகள், குப்பைகள் போடுபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    இதேபோல் ரமேஷ், குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். அப்போது கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறை வேற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். பின்னர் பல்வேறு தீர்மானங் கள் நிைறவேற்றப்பட்டன.

    கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    Next Story
    ×