என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசிபலன்"

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல்.
    • இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-4 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை (முழுவதும்)

    நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : மரண / அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி

    சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல். தொண்டரடிப்பொடியாழ்வார், பெரிய நம்பி திருநட்சத்திர வைபவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-இன்பம்

    கடகம்-ஒற்றுமை

    சிம்மம்-வாழ்வு

    கன்னி-பரிசு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- உழைப்பு

    மகரம்-இன்பம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணிச்சுமை அதிகரிக்கும் நாள். மற்றவர்களை முழுமையாக நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    ரிஷபம்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும்.

    மிதுனம்

    பரபரப்பாகச் செயல்படும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கடகம்

    சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். அயல்நாட்டிலுள்ள நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    கன்னி

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளைப் பாராட்டுவர்.

    விருச்சிகம்

    நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    தனுசு

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும். பொருளாதார நிலை உயரும்.

    மீனம்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். புது முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-3 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.34 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று மாத சிவராத்திரி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான் (நின்ற கோலம்) ஸ்ரீ ஆதிநாதவல்லி கோவிலில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்பு தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஊக்கம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-புகழ்

    சிம்மம்-நிம்மதி

    கன்னி-நன்மை

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- சாந்தம்

    மகரம்-போட்டி

    கும்பம்-நற்சொல்

    மீனம்-மேன்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சனை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் அவதிப்பட நேரிடும்.

    ரிஷபம்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தேடி வரலாம்.

    மிதுனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.

    கடகம்

    இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    சிம்மம்

    ஆதாயம் கிடைக்கும் நாள். அன்றாடப் பணிகள் தொடர அடுத்தவர் உதவி கிட்டும். தொலைபேசிவழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.

    கன்னி

    எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    துலாம்

    மனக்குழப்பம் அகலும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சிகம்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    கும்பம்

    எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கௌரவம், அந்தஸ்து உயரும். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மீனம்

    இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கொஞ்சம் குறையலாம்.

    ரிஷபம்

    வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    துலாம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஈர்க்கும்.

    தனுசு

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் மாறும்.

    மீனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
    • ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-2 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி பின்னிரவு 3.51 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : விசாகம் இரவு 7 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை, ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-இன்பம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-உதவி

    கன்னி-நிறைவு

    துலாம்- நம்பிக்கை

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- சாதனை

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-உவகை

    மீனம்-சுகம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : சுவாதி மாலை 4.28 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-பாசம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- உண்மை

    மகரம்-வரவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-பக்தி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    திடீர்ப் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.

    சிம்மம்

    வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமிவாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும்.

    துலாம்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    யோகமான நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.

    தனுசு

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    மகரம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

    கும்பம்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

    மீனம்

    வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்டைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை - 29 (திங்கள்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 11.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : சித்திரை பிற்பகல் 2.09 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை

    சர்வ ஏகாதசி. சுபமூகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-செலவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-உறுதி

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-தனம்

    தனுசு- வரவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-அன்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மிதுனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும்.

    கடகம்

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    சிம்மம்

    வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    துலாம்

    நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என்றுநினைத்த பணவரவு ஒன்று கைக்கு கிடைக்கலாம்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.

    தனுசு

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    கும்பம்

    பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    காரிய தாமதம் ஏற்படும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாகத் திட்டமிட்ட காரியம் ஒன்றை மாற்றியமைப்பீர்கள்.

    • உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
    • மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

    தனுசு ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.

    உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.

    குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கும்ப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மீன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.

    'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    • கடகம் அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.
    • சிம்மம் அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.

    மேஷம்

    தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். உழைப் பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அக லும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.மாமியார் மருமகள் பிணக்கு,தாய் மகள் கருத்து வேறுபாடு மறையும்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். சுப விரயங்கள் மிகுதியாகும். 17.12.2025 அன்று காலை 10.26 மணி முதல் 19.12.2025 அன்று இரவு 10.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நிதா னத்தை கடைபிடிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு இன்னல்களில் இருந்து உங்களை காக்கும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார்.இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்க ளால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதான மாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூல மாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    மிதுனம்

    விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக் கிறார். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு சூரியன் செவ்வாய் சுக்கிரன் பார்வை உள்ளது.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமா னம் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தை கள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்க ளாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்கு தாரர்க ளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும்.

    கடகம்

    அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப் பட்ட முயற்சியால் எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் . தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பணவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பண பிரச்சினை நீங்கும். வானொலி தொலைக்காட்சி, ஊடக துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். பெண்கள் குடும்பப் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். திருமணம் முயற்சி செயல் வடிவம் பெறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசி யல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

    சிம்மம்

    அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். குலதெய்வ நல்லாசிகள் கிட்டும். ஆன்ம பலம் பெருகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகுந்த ஆதா யத்தை ஏற்படுத்தித் தரும்.புத்திர பிரார்த்தம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது. சில ருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ர நிவர்த்தி பெறும் போது எதையும் சமாளிக்கும் தைரியத்தை யும் தெம்பையும் வழங்குவார். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

    கன்னி

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சி யும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். பாகப் பிரிவினை யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.சப்த மாதாக்களை வழிபட சங்கடங்கள் அகலும்.

    துலாம்

    நிம்மதியான வாரம்.வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.உங்கள் யோ சனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.முதலீட்டாளர்கள் பெரிய முதலீடுகளை பயன்படுத்தி புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும் .சகோதர உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் மாறும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வசிக்கும் வீட்டை விரி வாக்கம் செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மருத்துவமனைச் செலவு கள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். ஸ்ரீ வராகியை வழிபட நல்ல வாய்ப்பு கள் கிடைக்கப்பெற்று நிம்மதி கூடும்.

    விருச்சிகம்

    பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய்க்கு 2,5ம் அதிபதியான குருவின் சம சப்தம பார்வை உள்ளது.புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டு களைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக் கும். நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப் பும் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி பெற்றவுடன் திருமண முயற்சிகள் கைகூடும். முழுத் திறமை களையும் காட்டி மேலதிகாரிகளின் கவனத்தைக் ஈர்ப்பீர்கள்.நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சினை கள் தீரப் போவதற்கான வழி பிறக் கும். சக்கரத்தாழ் வாரை வழிபட நவகிரக தோஷம் விலகும்.

    தனுசு

    தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடி கள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.வாக்கு வன்மை யால், பண பலத்தால் விரும்பி யதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்த கர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.மாமனார், மாமி யாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும்.நோய்கள் நீங்கி ஆரோக்கி யம் அதிகரிக்கும். திருமணத்திற்கு வரன் தேடத் துவங்குவீர்கள்.சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

    மகரம்

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக் கும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.வியா பாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். கடன் தொல்லை ஒரு பக்கம் இருந்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்க வும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். இறை வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். வீடு, வாகன யோகம் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    கும்பம்

    அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடை யின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப் பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும்.சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார் கள்.14.12.2025 அன்று இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தக வலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக் கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காவல் தெய்வ வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மீனம்

    பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக் கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். 14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டா ரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×