search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவுகள்"

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
    • இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2022-2023 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 835 மாணவர்களும், 21 ஆயிரத்து 593 மாணவிகளும் என மொத்தம் 43ஆயிரத்து 428 பேர் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதினர்.

    இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 168 மாணவர்களும், 20 ஆயிரத்து 410 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 578 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 3,850 பேர் தேர்ச்சி பெறவில்லை.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 300 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 121 மாணவர்களும், 9 ஆயிரத்து 392 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 513 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களின் 9 ஆயிரத்து 170 மாணவர்களும், 8 ஆயிரத்து 973 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    மறுகூட்டல்

    இந்த நிலையில் 10- வகுப்பு தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் சிலர் மறுகூட்டல் ேகாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களுடைய விடைத்தாள் மீண்டும் மறுகூட்டல் செய்யப்பட்டது.

    மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    மதிப்பெண் சான்றிதழ்

    மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் மாற்றங்களுடன் அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கரூர் :

    கரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீரியபாளையம் 7-வது வார்டு வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புன்னம் 3-வது வார்டு வாக்கு எணணிக்கை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    வீரியபாளையம் 7-வது வார்டில் ெமாத்தம் பதிவான 186 வாக்குகளில் 97 வாக்குகள் பெற்று ஜெயபால் வெற்றி பெற்றார். புன்னம் ஊராட்சி 3-வது வார்டில் மொத்தம் பதிவான 317 வாக்குகளில் 190 வாக்குகள் பெற்று ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 

    • உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட த்தில் தேர்தல் நடைபெற்ற 7 உள்ளாட்சிப் பதவிகளுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் வாக்குகள் எண்ண ப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு 7-வது வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வசம் இருந்த இடத்தை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுகாடு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மேலப்பட்டு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக அயூப்கான் வெற்றி பெற்றார். அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக வெள்ளைச்சாமி வெற்றி பெற்றார். குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக செல்லமணி வெற்றி பெற்றார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டமான் ஊரணி (பொது) ஊராட்சி மன்ற தலைவராக தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். கல்லூர் கிராம ஊராட்சி வார்டு எண் 6க்கு பூமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கீரை கிராம ஊராட்சியில் வார்டு எண் 5க்கு சாத்தையா வெற்றி பெற்றார். மிரட்டுநிலை கிராம ஊராட்சிக்கு வார்டு எண் 1க்கு பாண்டிசெல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வன்னியம்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் 1க்கு சின்னப்பொண்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

    • அ.தி.மு.க.-சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
    • வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. ராஜாக்கமங்கலம் யூனியன் 10-வது வார்டு, குருந்தன்கோடு யூனியன் 7-வது வார்டுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவ ர்கள் மட்டும் அனுமதி க்கப்பட்டனர். செல்போ ன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் யூனியன் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அறையின் சீல்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மேஜைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா கலையரசு வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அனிதா கலையரசிற்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.குருந்தன் கோடு யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, அந்த யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் பேபி வெற்றி பெற்றார்.

    மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு க்கான வாக்கு எண்ணிக்கை தக்கலை யூனியன் அலுவல கத்தில் நடந்தது. பதிவான 287 வாக்குகளில் 166 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் அமுதா ராணி வெற்றி பெற்றார். இதையடுத்து, அமுதா ராணிக்கு தேர்தல் அதிகாரி ராஜா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

    கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு மற்றும் காட்டாத்துறை ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை திருவட்டார் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றார். காட்டாதுறை 5-வது வார்டு தேர்தலில் பிளஸ்சி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    வாக்கு எண்ணிக்கையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சேலம், நாமக்கல் பட்டதாரிகள் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.
    • `குரூப்-2, 2 ஏ’ வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் ேதர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்பட 67 வகை பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப `குரூப்-2, 2 ஏ' முதல்நிலை தேர்வு கடந்த ேம மாதம் 21-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் பங்கேற்று எழுதினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு `குரூப்-2, 2 ஏ' வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இதேபோல் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குரூப்-1 பதவியில் 66 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேபோல், 50 குற்றவியல் உதவி வக்கீல் பதவிக்கான பிரதான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • சேலம், நாமக்கல் பட்டதாரிகள் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.
    • `குரூப்-2, 2 ஏ’ வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் ேதர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்பட 67 வகை பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப `குரூப்-2, 2 ஏ' முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் பங்கேற்று எழுதினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு `குரூப்-2, 2 ஏ' வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இதேபோல் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குரூப்-1 பதவியில் 66 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேபோல், 50 குற்றவியல் உதவி வக்கீல் பதவிக்கான பிரதான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ 8 உதவி இயக்குனர் பதவிகளை நிரப்ப தேதி அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ பிரிவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 25 செயல் அலுவலர் நிலை-1 பதவிகள், கூட்டுறவு தணிக்கை துறையில் 8 உதவி இயக்குனர் பதவிகள் நிரப்ப கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.

    பின்னர் செயல் அலுவலர் பணிக்கு தாள்-1, தாள்-2, தாள்-3 ேதர்வும், கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு தாள்-1, தாள்-2 தேர்வும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன.

    இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் ஏராள–மானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த 2 தேர்வுகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    ×