என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது.
    • விஜய் முதல்வராக விரும்புகிறார் என்பதால் த.வெ.க. தொண்டர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.

    இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.

    அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் "தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் த.வெ.க. கொடி, எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் பறந்து தொடர்பாக டி.டி.வி. தினகரன் விமர்சித்தது குறித்து திமுக nசய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு இளங்கோவன் பதில் அளிக்கையில் "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது. அவர்கள் தவெக தொண்டர்கள் இல்லை.

    அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். ஏனென்றால், விஜய் முதல்வராக விரும்புகிறார் என்று சொல்கிறார். ஆகவே, எடப்பாடி பழனிசாமி இந்த கண்டிசனை ஏற்பாரா?. அவர் விஜயை முதலமைச்சராக்குவாரா?" என்றார்.

    • தங்கம் விலை காலை, மாலை என இரு வேளையும் உயர்ந்து வருகிறது.
    • காலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதியில் நோவக் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் வச்ராட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் வச்ராட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வச்ராட் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெதெவ் அல்லது ஆர்தர் ரிண்டர்க்னெக்கை எதிர்கொள்வார்.

    • இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது.

    இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த திருத்தும் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இதில் பாஜகவின் வாக்கு திருட்டு சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் பீகாரின் தோரையா (Dhoraiya) தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பூத் என் 216 இன் கீழ் வரும் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகியோர் தாங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) அரவிந்த் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில், "ஐயா, நாங்கள் உயிருடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும், எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது  என அதிகாரி அரவிந்த் குமார் அவர்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார்.

    முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் 2018 உயிரிழந்த சோனியா சரண் என்பவரும் 2025 இல் உயிரிழந்த அவரின் மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.  

    • பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தீபாவளியை ஒட்டி, பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
    • அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டும்.

    திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார். மேலும் எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' எனவும் கூறினார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமாவளவனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்நிலையில் திருமாவளவின் சந்தேகம் நியாயமானது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    • 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.

    சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:-

    எங்களது போராட்டம் காரணமாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் கியாஸ் வீதம், 2 நாட்களில் 30 ஆயிரம் டன் கியாஸ் பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்வது தடைப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறிப்பாக தென்னிந்திய அளவில் நாமக்கல் நகரை மையமாக கொண்டு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக நாமக்கல் நகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை பட்டறைகளில் நிறுத்தி சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2 கோடி வீதம் சுமார் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாண்டில் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கியாஸ் டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்வதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை உருவாகி விடும்.

    இதனால் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிலிண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    • சுப்மன் கில் கேப்டனாக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டாஸில் தோல்வியடைந்து விடுவார் என்று பும்ரா, ரன் அப்புக்கு புறப்பட்டார் என கம்பீர் சிரித்தப்படி கூறினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது.

    முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார்.

    சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னாடி இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்ஷர் படேல், பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போல சிரித்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் கில்லிடம் நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    • டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி ஏற்பார் என்ற பேச்சு வலுவடைந்து வருகிறது.
    • ஆனால், டி.கே. சிவக்குமார் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். அடுத்த மாதத்துடன சித்தராமையாவின் முதல்வர் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது.

    இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள். இது தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு என்ற தகவல் உலா வருகிறது.

    இதனால், நீங்கள் எப்போது முதல்வர் ஆவீர்கள் என டி.கே. சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், சிவக்குமார் ஆதரவாளர்கள் சில, முதல்வராகுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனத் தெரிவித்து வருகின்றனர்.

    சில மீடியாக்கள் முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியதாக செய்திகள் வெளியிடுகின்றன.

    இந்த நிலையில் லாக் பாக்கில் மக்களை சந்தித்து அவர்களுடன் டி.கே. சிவக்குமார் உரையாடினார். அப்போது அவரிடம், இந்த வருடம் இறுதியில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வராக வேண்டும் என்று சிலர், தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், அவ்வளவுதான். இதை திரித்து கூற வேண்டாம். முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. சில மீடியாக்கள் ஏற்கனவே அவ்வாறு காண்பித்துள்ளன. எனக்கு எந்த அவசரமும் இல்லை.

    நீங்கள் பொய்யான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை உருவாக்கினால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன். எந்த பேட்டியும் கொடுக்கமாட்டேன். அழைக்கவும் மாட்டேன். மீடியாக்களை அழைக்காமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என எனக்குத் தெரியும்.

    நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் போட்டது யார்? நான் அவ்வாறு எங்கே சொன்னேன்? நான் அப்படி எங்கேயாவது சொல்லி உள்ளேனா? யாரோ சிலர் அது பற்றி பேசும்போது, நான் அமைதியாக இருக்கிறேன். அதுப்பற்றி விவாதிக்கக் கூடாது.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

    அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு,  மாணவியை  தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

    அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர் பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் போலவே  தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல்  வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.      

    • எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
    • ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

    திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

    இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
    • அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.

    நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..

    கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.

    அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..

    கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

    அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.

    அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×