என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது.
- இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தகவலும் வரவில்லை என்றும், அமெரிக்காவைத் தவிர வேறுயாரும் இந்த கூற்றை தற்போது வரை முன்வைக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்து வருகிறது.
மறுபுறம் இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் மீண்டும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்பதை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
ரஷ்ய எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்று நம்புவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. சுதந்திர நாடுகளுக்கு கட்டளையிடும் உரிமையைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் கூற்றுகளில் புதிதாக எதுவும் இல்லை" என தெரிவித்தார்.
இதன்மூலம் தற்போதுவரை இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பது உறுதியாகிறது.
- இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
- நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுதி இயக்கிய படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
கொங்கு வட்டார பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.
கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.
வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த கண்டித்து வருகின்றனர்.
ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
- ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை :
பரபரப்பான அரசியல் சூழ்ந்லையில் நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாளை மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
- பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் `BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து அவ்வப்போது ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. டீக் போட்டியில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வசதியுள்ளது.
- வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது.
- ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?
மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதி காந்த்,
"இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? இலவசங்களால் ஒட்டுமொத்த நாடும் ஏற்கனவே... நாங்கள் குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் பேசுகிறோம். நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?
ஒரு நல்ல அரசு என்ற முறையில், விளிம்புநிலை மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் நீங்கள் (இலவசங்களை) வழங்கத் தொடங்கினால், அது ஒரு வகையான 'திருப்திப்படுத்தும் அரசியல்' ஆகாதா?"
நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையை சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவது போன்ற ஒட்டுமொத்த பொதுமக்களின் வளர்ச்சிக்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, நீங்கள் தொடர்ந்து உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மக்களும் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அதை வழங்க வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், வசதிகளை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும், அனைத்து வாழ்வாதாரங்களும் கொண்ட வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது. மாநில அரசுகள் தங்களது இதுபோன்ற கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது? என்று நினைக்கிறோம்.
சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களை நாம் பார்த்தோம். ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் ஆளுமைகள், தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இப்படி இலவசங்களை தொடர்ந்து கொடுத்துவந்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்த இலவசங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்?
மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்களுக்கு இத்தகைய பண விநியோகங்களைச் செய்து வருவதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கக்கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கான நீண்டகால வளர்ச்சி திட்டத்தை உருவாக்கலாம்.
மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகளை அரசு உருவாக்க வேண்டும். இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் கொடுக்கத் தொடங்கி... நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தையும் செலுத்தினால், பிறகு மக்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும் என்று தெரிந்த பிறகு, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்வார்கள்? நாம் இப்படித்தான் தேசத்தைக் கட்டமைக்கிறோமா?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.
- அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
- பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.
குழு புகைப்படத்தின் போது, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic சிஇஓ டேரியோ அமோடி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். ஆனால், பக்கத்து பக்கத்தில் நின்ற சாம் ஆல்ட்மேனும் டேரியோ அமோடியும் மட்டும் கைகளைக் கோர்க்கவோ, கைகுலுக்கவோ செய்யாமல் தவிர்த்தனர்.
இந்த இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கடுமையான தொழில் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் முன்பு 'OpenAI' நிறுவனத்திலேயே துணைத் தலைவர்களாக பணியாற்றினர். அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
சாம் ஆல்ட்மேன் AI பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டி, டேரியோ மற்றும் டேனியலா, 2021ல் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.
வெளியேறிய பிறகு, அவர்கள் 'Anthropic' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இது தற்போது OpenAI-க்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
இந்தத் தொழில்முறைப் பகைதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் உலகமே கவனிக்கும் மாநாட்டின் மேடையிலும் வெளிப்பட்டது.
- தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
- அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா தி.மு.க.வுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது.
ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளார்கள்.
காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.
காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரைதேறாது என்றார்.
- தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
- பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.
- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
- அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.
எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






