என் மலர்
இந்தியா
- இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.
- ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.
சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
- சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
- சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.
அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.
சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.
நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.
மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.
- சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?.
- அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.
கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் முடிவுதான் பைனல் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
மக்கள் பேசலாம். ஆனால், உயர்மட்டம் யார்?. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?. மக்களை விட நீங்கள்தான் (செய்தியாளர்கள்) இது பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக முடிவு செய்வார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.
பெங்களூருவில் அதிகமான பீகார் மக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
- மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார்.
- ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.
காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதன்முறையாக பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜா பகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார். ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.
அவரால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராட முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக அவரை முதல்வராக ஆக்கப்போவதில்லை என்பதை நிதிஷ் குமார் அறிந்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக பாஜக-வைச் சேர்ந்த சில Chela (Foot Soldier)-க்களுக்கு பதவியை கொடுக்கும்.
பிரதமருக்கு உலகைச் சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களில் பிரச்சினைகளை பார்க்க நேரமில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே தென்படுகிறார். மாநகராட்சி தேர்தலில் கூட தெருக்களில் பிரதமர் மோடி கர்ஜிப்பதை உங்களால் பார்க்க முடியும். பீகார் தேர்தலில் மகனின் திருமணம் போல் பிசியாக இருக்கிறார்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
- ஆர்.ஜே.டி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது.
- நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சியாஹரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சீதாமரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
* நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றது.
* பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்கால ராணுவத் தாக்குதல்களில், பீகாரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பு வழித்தடத்தில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
* ஆர்ஜேடி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது. நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் திறக்கப்படும்.
* சீதாமரியில் உள்ள சீதா கோயில் மத, கலாச்சார, கல்வி மையமாக மாறும்
* லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்தது. நிதிஷ் குமார்- நரேந்திர மோடி ஜோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
* லாலுவின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு பீகாருக்கு ரூ.2.80 லட்சம் கோடி வழங்கிய நிலையில், 10 ஆண்டுகளில் ரூ.18.70 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
* நவம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, மதியம் 1 மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும். ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரதமர் மேதாடி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* முதல் முறையாக வாக்களிப்பவர்கள், தங்களது வாக்குகள், பீகாரில் அடுத்த NDA அரசாங்கத்தை அமைப்பதற்கானது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
* இந்திய மகள்கள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளனர். இந்த வெற்றி நாட்டின் பெண்களின் தன்னம்பிக்கையை குறிக்கிறது
* ஒரு காலத்தில் 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ'வை கேலி செய்தவர்கள் இப்போது இந்தியாவின் மகள்களை அவமதித்ததைப் பற்றி சிந்திக்கிறார்கள்
* விகாஸ்க்கு (வளர்ச்சி) பெயர் பெற்றது தேசிய ஜனநாயக கூட்டணி. அதே நேரத்தில் 'வினாஷ்'க்கு (அழிவு) பெயர் பெற்றது ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ்.
* 2005 தேர்தல் தோல்விக்காக, பீகாரில் அனைத்து மத்திய திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தி பழிவாங்கியது.
* கோசி நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க நீண்டகால தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
* வெளிநாட்டு பயணத்தின்போது உலகத் தலைவர்களுக்கு நான் மக்கானா (makhana) பெட்டிகளை பரிசளிக்கிறேன். இது பீகாரின் விவசாயிகளின் கடின உழைப்பு என்று அவர்களிடம் சொல்லப்படும்.
* ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. டிஎஸ்பி சத்யபால் சிங் சட்டத்தை மீறுவதற்கு எதிராக செயல்பட்டதால் சஹர்சாவில் கொலை செய்யப்பட்டார்.
* ஆட்சிக்கு வந்ததும் நாலந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டுவேன் என்று காங்கிரஸ் நாம்தார் (ராகுல்காந்தி) கூறுகிறார். பொய் சொல்வதற்கும் எல்லை உண்டு.
* நாலந்தா பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் அரசு ரூ.20 கோடி வழங்கிய நிலையில், நாங்கள் ரூ.2,000 கோடி செலவிட்டோம்.
* காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.
* காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
- ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-
பீகார் தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு NDA என்ன செய்தது என்பது குறித்து முதலில் பதில் அளிக்க வேண்டும்.
வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பாஜகவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும் பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். அவர் புதிய அமைச்சகத்தை (அவமதிப்பு அமைச்சகம்) உருவாக்க வேண்டும்.
பீகார் அரசை நடத்துவது பிரதமர், மத்திய தலைவர்கள்தான், நிதீஷ் குமார் அல்ல.
அரசு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பீகாரில் உள்ள NDA அச்சுறுத்துகிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
- 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
- இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்தது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் இருந்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு இது எடுத்துக்காட்டு என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.
- ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் தல்சந்த் அகிர்வார் (வயது35). இவரது மனைவி ஜாங்கி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
தனது குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்த தல்சந்த் அரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த தல்சந்த் தனது மனைவி ஜாங்கி வீட்டு உரிமையாளருடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தல்சந்த் தனது மனைவியை கண்டித்தார். அவர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.
இதில் மனமுடைந்த தல்சந்த் கடந்த அக்டோபர் 31-ந்தேதி தனது மனைவியை வீடியோ காலில் அழைத்து உருக்கமாக பேசினார்.
ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. நீ என்னோடு ஒருமுறை பேசியிருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். எனக்கு செய்தது போல் யாருக்கும் துரோகம் செய்யாதே என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.
அன்று மாலை தல்சந்தின் சகோதரர் சந்தர்பன் அவரை பார்க்க வீட்டிற்கு வந்தார். அங்கு தல்சந்த் மயங்கி கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து பார்த்த போது தல்சந்த் இறந்தது தெரிய வந்தது. அவரது பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது சந்தர்பன் புகார் தெரிவித்தார்.
இதனை மனைவியின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். தல்சந்த் குடித்து விட்டு வந்து ஜாங்கியை கண்மூடித்தனமாக தாக்குவார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
தல்சந்த பேசிய வீடியோகாலின் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
- ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச்.குன்னே பள்ளியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மருமகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்திளுடன் வசித்து வந்தார்.
ஆதிலட்சுமியை அவருடைய மருமகள் ஸ்ரீதேவி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஆதிலட்சுமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய யாரும் இல்லை. இதனால் மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொள்ளிக்குடம் உடைத்து ஸ்ரீதேவி கொள்ளிவைத்தார். இதனைக் கண்ட கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மாமியாரும் மருமகளும் கீரியும், பாம்புமாக உள்ள காலத்தில் மாமியாருக்கு மருமகள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
- ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.
இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் வைத்தார். ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.
நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.






