என் மலர்tooltip icon

    இந்தியா

    • டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.

    ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.

    • 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    புதுடெல்லி:

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதற்கிடையே, 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.

    இதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 135 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 100 முதல் 110 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    NDTV கருத்துக்கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 152 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 84 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    பியூபிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பின்படி என் டி ஏவுக்கு133 முதல் 148 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 87 முதல் 102 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    • பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டு நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை.
    • பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு அதிகமான இடங்களில் பாதுகாப்புப்படையினர், போலீசார் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

    • மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
    • 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதையடுத்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தங்கம் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளி உன்னிகிருஷ்ணன் போட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • முன்னாள் தலைவரான வாசு, இரண்டு முறை ஆணையராகவும் இருந்துள்ளார்.

    சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.

    தங்கம் மாயமான வழக்கில் முக்கியமான குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போட்டி மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரான என். வாசு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இரண்டு முறை இந்த போர்டின் ஆணையகராகவும் பணியாற்றியுள்ளார்.

    வாசு, மாநில அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரிய பதவி வகித்த நபர் இவர் ஆவார். போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

    கார் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் இன்று மதியம் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டெல்லி கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதையடுத்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    • 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதையடுத்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பகல் 11 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    • கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
    • நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது பதிவான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

    அதில், நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. கார் வெடித்ததும் மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பும் ஏற்பட்டுள்ளது. 



    • பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

    கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.

    இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

    * உச்ச நீதிமன்றம் சார்பாக, இந்த பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    * இத்தகைய இழப்பின் வலியை எந்த வார்த்தைகளாலும் உண்மையிலேயே குறைக்க முடியாது. இருப்பினும் இந்த துயரமான நேரத்தில் தேசத்தின் கூட்டு இரக்கமும் ஒற்றுமையும் சிறிது ஆறுதலை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    * துயரமடைந்தவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதியை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

    * உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
    • கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லியில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

    • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
    • சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

    ×