என் மலர்
இந்தியா
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
- காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டி வந்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை எதிரே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்து சிதறிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சிக்னல் அருகே கார் வந்து நிற்பது, பின்னர் வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கார் வெடித்து சிதறும் போது கடுமையான தீப்பிழம்பு காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. கார் வெடித்து சிதறிய போது சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதனால் 13 பேர் பலியாகி உள்ளனர்.
- 1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது.
இதில் உலகளவில், 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 9,700 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகளால் 8.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
1998-ம் ஆண்டு குஜராத் புயல், 1999-ம் ஆண்டு ஒடிசா சூப்பர் புயல், 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
2024-ம் ஆண்டில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கை பேரழிவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் டொமினிகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, இந்தியா, பஹாமாஸ் ஆகியவை உள்ளன.
- கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
- நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.
அதன்படி, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
- பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகாரக் கைப்பற்றலில் இருந்து சொந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான கதைகளை உருவாக்க முனைகிறது. இது பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்பட்ட தந்திரமாகும்.
சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது. பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார்.
- காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த வெடிப்புக்குக் காரணமான கார் பல முறை விற்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அரியானா பதிவு எண்ணைக் கொண்ட 2013 மாடல் ஹூண்டாய் i20 மாடல் காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் குருகிராமைச் சேர்ந்த சல்மான் ஆவார்.
சல்மான் வேறு ஒருவரிடமிருந்து காரை வாங்கி 2014 இல் தனது பெயரில் பதிவு செய்துள்ளார். போலீசார் சல்மானைத் தொடர்பு கொண்டபோது, ஓக்லாவைச் சேர்ந்த தேவேந்திரா என்ற நபருக்கு காரை விற்றதாகக் கூறினார்.
பின்னர் தேவேந்திராவைத் தொடர்பு கொண்டபோது, அது அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அது ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அமீருக்கு விற்கப்பட்டது. அமீரிடமிருந்து, அக்டோபர் 29 ஆம் தேதி மாலை பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாக்டர் உமர் முஹம்மதுவின் கைகளுக்கு அது சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார். இவ்வளவு முறை விற்கப்பட்டபோதும் உரிமை தொடர்பான ஆர்.சி. ஆவணங்களை மாற்றத் தவறியது சந்தேகத்தை அதிர்க்கரித்துள்ளது.
அரியானாவின் பரிதாபாத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 8 மணியளவில் பதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் அந்த ஹூண்டாய் i20 கார் கார் நுழைந்தது.
காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
காலை 8.20 மணியளவில் ஓக்லா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பின் சிசிடிவி காட்சிகளிலும் இந்த கார் பதிவாகியுள்ளது.
மதியம் 3.19 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங் பகுதிக்குள் வாகனம் நுழைந்தது. மாலை 6.22 மணிக்கு அங்கிருந்து மெதுவாக நகர்ந்த கார், நேதாஜி சுபாஷ் மார்க்கில் உள்ள போக்குவரத்து சிக்னலை அடைவதற்கு சற்று முன்பு, மாலை 6.52 மணிக்கு வெடித்தது.
வெடிவிபத்து ஏற்பட்ட அதே நாளில் அரியானாவில் பரிதாபாத்தில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
- ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
- கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?
- இங்கே என்ன நடக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான 'ரெடிட்' இல் ஒரு மாணவரின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.
மாலை 4 மணியளவில் அவரது பதிவில், 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர். மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இடைப்பட்டு சரியாக 3 மணி நேரம் கழித்து 7 மணியளவில் அதே பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து அந்த பதிவு தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மேலும் குணப்படுத்தமுடியாத காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார்.
- ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
- தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார்.
இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.
இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.
நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.
நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.
நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.
தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.
- வந்தே பாரத் ரெயில் வரவேற்று பெற்றதால், ஸ்லீப்பர் ரெயில் விட திட்டம்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய ரெயில்வேத்துறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக அதிவேக ரெயிலான வந்தே பாரத்தை அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட நிறுத்தங்களை கொண்ட இந்த ரெயிலால், பயணிகள் நேரம் மிச்சமானது. முதலில் 8 பெட்டிகளாக இயக்கப்பட்டு, படிப்படியாக பல்வேறு வழித் தடங்களில் 24 பெட்டிகள் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரெயில்களுக்கு பயணிகள் இடையே அமோக வரவேற்பு ஏற்பட்டதால், ஸ்லீப்பர் ரெயிலை விட ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.
தற்போது வெர்சன் 2 என அழைக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை, பயணிகளுக்கு இணையாக எடையுடனும், எடை இல்லாமலும் 180 கி.மீ. வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா டிவிசனில் மேற்கு மத்திய ரெயில்வேஸ் இந்த சோதனையை செய்துள்ளது. ரோஹல்குர்த்- இந்திராகார்- கோட்டா பிரிவில் 100 கி.மீ. இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
- டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.






