என் மலர்tooltip icon

    இந்தியா

    • அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார்.
    • ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயது மோகன் கோகடே.

    மோகனின் குடும்பம் நன்கு படித்த மற்றும் வசதியான குடும்பம். இவரது சகோதரி துபாயிலும், சகோதரர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.

    இவரது ஒரு மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், மற்றொரு மகன் இன்ஜினியர் ஆவார். மோகன் முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து தோட்ட தொழில் செய்து வந்தார்.

    வசதியான பின்னணி இருந்தும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். இந்தக் கடனை அடைப்பதற்காக திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார்.

    சியோன் மற்றும் பிற இடங்களில் நகை பறிப்புகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி 25 அன்று சியோனில் ஒரு பெண்ணிடம் பைக்கில் சென்று சங்கிலியை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார். மேலும் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார்.

    அவர் உடைகளை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் அதே ஜோடி ஷூக்களை அணிந்திருந்தார். போலீசார் சுமார் 80 சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, முகம் தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் மாறாமல் இருந்ததைக் கவனித்தனர். இதுவே அவர் பிடிபட முக்கியத் துப்பாக அமைந்தது.

    மோகன் நெரூலில் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடி, அதைப் பயன்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அவர் மீண்டும் அடுத்த திருதிற்காக வாகனத்தை எடுக்க வந்தபோது, ஷு அடையாளத்தை வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.   

    • 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
    • தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).

    1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

    கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. 

    • மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது.
    • நான்காவது வகை "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்"

    மும்பையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா ஒன்றில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் நான்கு வகை என்றும், இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார். 

    விழாவில் பேசிய அவர்,

    'இந்துத்துவாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். உங்கள் மத நடைமுறையையோ அல்லது உங்கள் மொழியையோ. இந்துத்துவா உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இந்துக்களில் நான்கு வகையினர் உள்ளனர். முதலாவது, பெருமையுடன் நாங்கள் இந்துக்கள் எனக்கூறுவார்கள். இரண்டாவது பிரிவில், "நாங்கள் இந்துக்கள், அதனால் என்ன? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?" என்று கூறுபவர்கள். மூன்றாவது பிரிவில், "வீட்டிற்குள் மட்டும் இந்துக்கள்" என்று கூறுபவர்கள்.

    நான்காவது "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்" அடங்குவர். மேலும் அதிகமான மக்களை மறக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன'. என்று கூறினார். மேலும் இந்து பாவம் அல்லது இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.

    "மதத்தின் காரணமாகப் பிரிவினை ஏற்பட்டது. நாங்கள் இந்துக்கள் என்பதால் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று சொன்னோம். இது தவறு என்று கூறும் மக்கள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் இந்தியாவில் உள்ளன. மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது. 'இந்து பவ் கா விஸ்மரன்' என்பது இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்தது," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து வங்கதேச வன்முறைகள் தொடர்பாக பேசியவர்,  வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள 1.25 கோடி இந்துக்கள் அங்கேயே இருந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடிவு செய்தால், அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் பாடகர் அட்னான் சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
    • இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.

    இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இளநிலை நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மே 3-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

    இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • 2 கோடி கத்தோலிக்கர்களுக்குத் தலைமை தாங்கும் முதல் தலித் பேராயர் இவர் ஆவார்.

    இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்ட்டுள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், ஐதராபாத் பேராயர் பூலா அந்தோணி தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

    64 வயதான இவர், இந்தியாவில் உள்ள சுமார் 2 கோடி கத்தோலிக்கர்களுக்குத் தலைமை தாங்கும் முதல் தலித் பேராயர் ஆவார்.

    • பீகாரின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை எம்.பி.யாக பப்பு யாதவ் உள்ளார்.
    • பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன், பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை மக்களவை உறுப்பினராக உள்ளார்.

    பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். 1995-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத்தகராறு வழக்கு தொடர்பாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.

    இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்..

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான முறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை வெளிப்படுத்தியது. அந்த மகளுக்கு நீதி கோரி குரல் கொடுத்த பப்பு யாதவ் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
    • மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.

    திருவனந்தபுரம்:

    பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.

    மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:

    இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.

    மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.

    • ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
    • மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

    ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.

    அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.

    இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.

    முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.

    இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

    மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.

    ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

    நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.  

    • ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தது.
    • விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அரியானா மாநிலம் பரிதாபாத், சூரஜ்குண்ட்-இல் பொருட்காட்சி மேளா நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று மேளாவில் ராட்சத ராட்டினம் திடீரென நடுப்பகுதியில் உடைந்து விழுந்தது. ராட்டினம் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    அவர் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தால் படுகாயமடைந்துய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேளாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

     

    • இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
    • அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

    இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework மட்டுமே.

    அறிக்கையின் 2-வது பத்தி மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்கியுள்ளன.

    ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வரைவு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகச் சாய்ந்துள்ளது மற்றும் இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.

    உதாரணமாக, அனைத்து அமெரிக்கத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

    ஆனால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 18 சதவீத சுங்க வரியை விதிக்கும். இந்தப் பொருட்களில் ஜவுளி, தோல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அமெரிக்கா இந்தச் சுங்க வரியை நீக்கும்.

    குறிப்பிட்ட சில விமானங்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தவிர, எஃகு , தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் மீதான அமெரிக்கச் சுங்க வரிகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.

    நிலைமை இப்படி இருக்க, இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework எப்படிக் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
    • உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது. கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கலவரத்தின்போது படுகாயமடைந்த ஃபைசான் என்ற 23 வயது இஸ்லாமிய சமூக இளைஞர் உட்பட நான்கு பேரை சாலையில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்திய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.

    இதன்பின் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார். 

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஃபைசான் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 7 காவலர்கள்  நேரில் ஆஜராமாகசம்மன் அனுப்பியுள்ளது.

    அவர்கள் மீது கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலைக் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் டெல்லி போலீஸாரின் குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக இந்த நீதிமன்ற உத்தரவு பார்க்கப்படுகிறது.

    • மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.

    மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி. இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் இம்ரான் உணர்ச்சிபொங்க உரையாற்றி உள்ளார்.

    அவையில் அவர் பேசியதாவது, நாட்டில் சட்டம் என்பது சிலரைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பாய்கிறது. பரேலியில் தொழுகை நடத்தியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாரான கிறிஸ்தவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் பெதுல் பகுதியில், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது.

    வாரணாசியில் நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்படுகின்றன. 42 முஸ்லிம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர்.

    சில மாநிலத் தலைவர்கள் ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாக மீறி வருகிறார்கள். கலவரத்தை தூண்டுபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அமைதிக்கு குரல் கொடுப்பவர்களை குறிவைக்கிறது.

    சிறுபான்மையினரை இலக்கு வைப்பதும், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

    வரலாறு இந்த அரசாங்கத்தை அதன் கோஷங்களை வைத்து மதிப்பிடாது. எளிய மக்களை அது எவ்வாறு பாதுகாத்தது மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை எவ்வாறு நிலைநாட்டியது என்பதை வைத்தே மதிப்பிடும் என்று பேசிய அவர், இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.

    அதாவது, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயரை நாடு நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், நேரு நினைவுகூரப்படுவார், அதே நேரத்தில் நரேந்திர மோடி எப்ஸ்டீன் கோப்புடன் நினைவுகூரப்படுவார் என்று அவர் கூறினார்.

    எப்ஸ்டீன் கோப்புகள்:

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.

    கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

    எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

    ×