search icon
என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • 1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன
    • அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் நம் குடியுரிமையை துறக்கின்றனர் என்றார் ஜெலன்ஸ்கி

    2022 பிப்ரவரி 24 அன்று ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.ீ

    போர் தொடங்கி 2 வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பெரும் கட்டிட சேதங்கள் ஏற்பட்டும், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் இல்லை.

    1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன.

    தேசிய ஒற்றுமை தினம் எனும் பெயரில் இந்த இணைப்பை கொண்டாடும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அயல்நாட்டில் வாழும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நன்றி. ஆக்கிரமிப்பின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி.

    உக்ரைனுக்காக போரிட வந்த அயல்நாட்டில் வசித்த நம் நாட்டினருக்கும் நன்றி.

    நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லாததால், அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், உக்ரைன் பாஸ்போர்டை வைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

    வெர்கோவ்னா ராடாவில் (உக்ரைன் பாராளுமன்றம்) ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்து இந்த வரைவு சட்டமாக ஒரு வருட காலம் ஆகும்.

    ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த செய்தி கேட்டவுடம் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் தாய்நாட்டை காக்க உடனடியாக திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்டனர்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
    • ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன

    இந்நிலையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன.

    இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியா படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷியாவின் 87 ஏவுகணைகள், 27 டிரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிந்தது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உக்ரைனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷிய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர். ரஷியாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
    • ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.

    ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.

    இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

    ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்ரமிப்புக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது
    • போர் 667 நாட்களை கடந்து தொடர்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.


    இரு தரப்பிலும் பெரும் கட்டிட சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்தாலும், போர் 667-வது நாட்களை கடந்து இன்று வரை தொடர்கிறது.

    • ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
    • அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷியா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார்.
    • மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1¾ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ மனைவி மரியானா. இந்த நிலையில் மரியானாவுக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு உணவு மூலம் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மரியானாவுக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எப்போது விஷம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கைரிலோ புடானோ முக்கிய நபராக உள்ளார். ரஷியாவை தாக்கும் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • முதல் பயணமாக உக்ரைன் செல்ல விரும்பினேன் என்றார் கேமரூன்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    இரு தரப்பிலும் உயிரிழப்புகளும், கட்டிட சேதங்களும் அதிகமாக இருந்தாலும், போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றார். ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் முதல்முறையாக அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார், கேமரூன். அங்கு சென்ற அவர், அந்நாட்டு தலைநகர் கீவ் (Kyiv) நகரில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    "எனது முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன்தான் செல்ல விரும்பினேன். இந்த வருடம், அடுத்த வருடம் என்று அல்ல, போர் எத்தனை வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் ஆதரவு தார்மீக ரீதியாக தொடரும். அரசியல் மற்றும் ராணுவ உதவிகளும் தடையில்லாமல் வழங்கப்படும். கடந்த 3 மாதங்களில் கருங்கடல் (Black Sea) பகுதியில் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கும் உலக உணவு போக்குவரத்திற்கும் மீண்டும் உக்ரைன் வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது" என டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் டேவிட் கேமரூனுக்கு வாழ்த்தும், உக்ரைனை ஆதரிப்பதற்கு இங்கிலாந்திற்கு உக்ரைன் மக்களின் நன்றியையும் தெரிவித்தார்.

    • போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
    • பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

    நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரானது 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியால் போரில் உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

    சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனவே தாக்குதலை தீவிரப்படுத்தும்படி ராணுவத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் முதியவர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவ செய்தித்தொடர்பாளர் வாடிம் அஸ்டாபியேவ் கூறினார். எனினும் உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

    • ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்.
    • மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

    உக்ரைன், கார்கிவின் கிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் அருகே பெண் ஒருவர் மண்டியிட்டுக் கிடப்பதைப் போன்ற ஒரு படத்தை ஜெலென்ஸ்கி வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணை சுற்றி சடலங்கள் சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கார்கிவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறுகையில், "க்ரோசா கிராமத்தில் இன்று மதியம் 1:15 மணியளவில் ஒரு ஓட்டல் மற்றும் கடையில் ராக்கெட் தாக்கியது.

    இந்த கிராமம் ஒரு முன்னணி நகரமான குபியன்ஸ்கிற்கு மேற்கே 30 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) தொலைவில் உள்ளது. மேலும், இங்கு, போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    ×