என் மலர்

    உக்ரைன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • வான்வெளி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்து விட்டனர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஏராளமானோர் உயிர் இழந்து உள்ளனர். ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை தொடர்ச்சியாக 17 முறை குண்டுகளை ரஷியா வீசியது.

    இந்த வான்வெளி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்து விட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வீச்சில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.
    • எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. ரஷியா வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகிறது.

    மேலும் ரஷிய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. நேற்று மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது.

    இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    ரஷியாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் புதின் கூறும் போது, ரஷிய கூட்டமைப் பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உள்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம். அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.

    இதற்கிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம்.
    • ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகளின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்கட்டிடம் இடிந்து தீப்பிடித்து எரிந்தது. 3 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, "மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம். ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது தூய ரஷிய பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்கு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய போது அதன் 10 ஏவுகணைகள், 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
    • பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

    இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது. இதில் ரஷிய தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர்.

    அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போரிட்டது. சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷியாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.

    பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம். அந்த நகரின் ஒவ்வொரு வீடும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இனி ஓய்வு எடுப்பதற்காகவும், மறுபயிற்சி பெறுவதற்காகவும் வாக்னர் குழுவினர் வருகிற 25-ந்தேதி பக்முத் நகரில் இருந்து வெளியேறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தகவலை அவர் ராணுவ உடை அணிந்து ரஷிய கொடி மற்றும் வாக்னர் படையின் சின்னங்களை ஏந்தியவாறு வீடியோவில் பேசி தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் பக்முத் நகரை முழுமையாக ஆய்வு செய்து தேவையான தற்காப்பு கோடுகளை உருவாக்கி அந்த நகரை ராணுவத்திடம் ஒப்படைப்போம் என்று ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார். பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பக்முத் நகரம் முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். அங்கு உக்ரைன் படையினர் இன்னும் சண்டையிட்டு வருகிறார்கள் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
    • வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது. ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கின. மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    அவ்வகையில் நேற்று இரவு உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.

    கீவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாடு திரும்பினார்.
    • உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என்றார்.

    கீவ்:

    ரஷியாவுக்கு எதிரான போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது.
    • பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.

    எனவே ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது. அதன்படி இந்த திட்டமானது உளவு டிரோன்களை பெருமளவில் வாங்குவதற்காகவும், ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் அங்குள்ள சில தனியார் டிரோன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

    அங்கு அந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கவும், போர் குறித்த உளவு தகவல்களை சேகரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள்.

    இந்த திட்டம் குறித்து நிலையில் அந்த நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறை மந்திரி மைக்கைலோ பெடோரோவ் கூறுகையில், `இந்த டிரோன் ராணுவம் திட்டத்துக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் ரூ.26 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மேலும் 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.

    இது தவிர 60 போர் டிரோன் ஆபரேட்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 முறை ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்
    • மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

    ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், அதிபர் புதினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்திருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது.

    மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம். பக்முத் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் முயற்சி தோல்வி அடைந்தது ரஷ்யாவால் முக்கியத்துவம் வாய்ந்த எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின.
    • ரஷியாவின் 11 ஏவுகணைளை உக்ரைன் விமானப்படை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

    உமான்:

    உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சமாதான பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், ஓராண்டைக் கடந்தும் சண்டை நீடிக்கிறது.

    இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷியா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின. இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மற்றொரு பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவ் மீது முதல் முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ் மீது பறந்த 11 ஏவுகணைகள் மற்றும் 2 ஆளில்லா விமானங்களை உக்ரைன் விமானப்படை இடைமறித்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print