search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "David Cameron"

    • போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • முதல் பயணமாக உக்ரைன் செல்ல விரும்பினேன் என்றார் கேமரூன்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    இரு தரப்பிலும் உயிரிழப்புகளும், கட்டிட சேதங்களும் அதிகமாக இருந்தாலும், போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றார். ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் முதல்முறையாக அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார், கேமரூன். அங்கு சென்ற அவர், அந்நாட்டு தலைநகர் கீவ் (Kyiv) நகரில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    "எனது முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன்தான் செல்ல விரும்பினேன். இந்த வருடம், அடுத்த வருடம் என்று அல்ல, போர் எத்தனை வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் ஆதரவு தார்மீக ரீதியாக தொடரும். அரசியல் மற்றும் ராணுவ உதவிகளும் தடையில்லாமல் வழங்கப்படும். கடந்த 3 மாதங்களில் கருங்கடல் (Black Sea) பகுதியில் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கும் உலக உணவு போக்குவரத்திற்கும் மீண்டும் உக்ரைன் வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது" என டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் டேவிட் கேமரூனுக்கு வாழ்த்தும், உக்ரைனை ஆதரிப்பதற்கு இங்கிலாந்திற்கு உக்ரைன் மக்களின் நன்றியையும் தெரிவித்தார்.

    • காவல்துறை நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்த உள்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கம்.
    • டேவிட் கேமரூன் கடந்த 2016-ம் ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் உலகின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீனர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக யூதர்கள் உள்ளிட்ட மக்கள் எதிர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை உள்துறை மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இவர் கருத்திற்கு கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது.

    இதனால் பிரதமர் ரிஷி சுனக், அவரை கேபினட் மந்திரிசபையில் இருந்து நீக்க முடிவு செய்தார். மந்திரி பதவியில் இருந்து விலக கேட்டுக் கொண்ட நிலையில், அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதனால் உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுயெல்லா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஜேம்ஸ் கிளேவெர்லியை உள்துறை மந்திரியாக நியமித்துள்ளார். அதேவேளையில் முன்னாள் பிரதமர் டுவிட் கேமரூனை வெளியுறவுத்துறை மந்திரியாக நியமித்துள்ளார்.

    57 வயதாகும் டேவிட் கேமரூன், பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக 2016-ல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பின் தற்போது முதன்முறையாக உயர் மந்திரிகளை மாற்றியமைத்துள்ளார்.

    ×