search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ராணுவம்"

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    • போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
    • பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

    நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரானது 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியால் போரில் உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

    சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனவே தாக்குதலை தீவிரப்படுத்தும்படி ராணுவத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் முதியவர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவ செய்தித்தொடர்பாளர் வாடிம் அஸ்டாபியேவ் கூறினார். எனினும் உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

    • ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது.
    • மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 500-வது நாளை தொட்டது. ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஏவுகணைகளை அழிக்கும் அமைப்பு ராக்கெட் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கிடையே கிளஸ்டர் எனப்படும் கொத்துகுண்டுகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இந்த நிலையில் மிக ஆபத்தான கிளஸ்டர் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும் போது, 'கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷியாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.

    கொத்து குண்டு என்பது ஒரு பெரிய குண்டுக்குள் பல சிறிய குண்டுகள் இருக்கும். ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து அந்த குண்டு வீசப்படும். அந்த பெரிய குண்டு இலக்கில் வெடித்த பின் அதில் இருந்து பல சிறிய குண்டுகள் வெடித்து சிதறும். இது ஒரே இலக்கின் பரந்த பகுதியை தாக்கும் தன்மை உடையவை.

    இதனால் மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

    இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற ஐ.நா. உடன்படிக்கையில் 100 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற குண்டுகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாக ரோவா கூறும் போது, 'உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடி குண்டுகளை வழங்கும் அமெரிக்கர்களின் முடிவு விரக்தியின் செயல். இது உக்ரைனில் எதிர்தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியையும் பலவீனத்தையும் காட்டுகிறது' என்றார்.

    • ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.
    • எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

    மின்ஸ்க்:

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டது.

    இதற்கிடையே தங்களது குழு மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷியாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

    இதையடுத்து அக்குழுவின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிகோஷின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார். ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே வாக்னர் குழு வீரர்கள் ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷியாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.

    அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகா ஷென்கோ கூறும் பாோது, வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

    சமரச பேச்சின் போது பிரிகோஷினிடம், வாக்னர் படை ரஷிய தலைநகருக்குள் நுழைந்ததால் அவரது வீரர்கள் அழிக்கப்படுவார்கள். பாதி வழியிலேயே நசுக்கப்பட்டு விடுவீர்கள் என்று தெரிவித்தேன். வாக்னர் வீரர்களுக்கான முகாம்கள் பெலாரசில் அமைக்கவில்லை. தேவைப்பட்டால் சில வளர்ச்சியடையாத பகுதிகள் வழங்கப்படும் என்றார்.

    • ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
    • ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராம டோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    • உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.
    • எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. ரஷியா வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகிறது.

    மேலும் ரஷிய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. நேற்று மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது.

    இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    ரஷியாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் புதின் கூறும் போது, ரஷிய கூட்டமைப் பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உள்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம். அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.

    இதற்கிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
    • பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

    இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது. இதில் ரஷிய தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர்.

    அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போரிட்டது. சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷியாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.

    பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம். அந்த நகரின் ஒவ்வொரு வீடும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இனி ஓய்வு எடுப்பதற்காகவும், மறுபயிற்சி பெறுவதற்காகவும் வாக்னர் குழுவினர் வருகிற 25-ந்தேதி பக்முத் நகரில் இருந்து வெளியேறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தகவலை அவர் ராணுவ உடை அணிந்து ரஷிய கொடி மற்றும் வாக்னர் படையின் சின்னங்களை ஏந்தியவாறு வீடியோவில் பேசி தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் பக்முத் நகரை முழுமையாக ஆய்வு செய்து தேவையான தற்காப்பு கோடுகளை உருவாக்கி அந்த நகரை ராணுவத்திடம் ஒப்படைப்போம் என்று ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார். பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பக்முத் நகரம் முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். அங்கு உக்ரைன் படையினர் இன்னும் சண்டையிட்டு வருகிறார்கள் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
    • லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேபோல உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ×