search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    • கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்துள்ளது. இதனால் கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக  இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    விருதுநகர்

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.

    திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.

    • விருதுநகர் அருகே திருச்சுழி ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.

    சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.

    • சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
    • கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பருவ மழை கள் வழக்கத்தை விட குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மைனஸ் அடிக்குச் சென்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. முக்கடல் அணையும் பிளஸ் அளவிற்கு வந்தது. தொடர்ந்து பெய்த மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.

    குறிப்பாக மலைப்பகுதிகளில் பெரும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது.

    திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பியதால், மறுகால் பாய்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த சூழலில் நேற்று பகல் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு-2 அணை பகுதியில் 34.2 மி. மீ. மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 24.6 மி. மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ. மழையும் பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 17.6 மி.மீட்டரும், பேச்சிப்பாறை அணையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.84 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள் உச்ச அளவை எட்டி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1451 கன அடி நீரும், பெரு ஞ்சாணி அணைக்கு 1180 கன அடி தண்ணீரும் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று சிற்றாறு-1 அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பழையாறு, வள்ளி ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால், 5-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மழை குறைந்தபோதிலும், வெள்ளத்தின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தே உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.

    மழை பெய்யும் போதெல்லாம் தங்கள் குடியிருப்பு பகுதி இதே நிலையை தான் சந்திக்கிறது. இதுபற்றி பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாரில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 3 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவலோகம் (சிற்றாறு-2) 34.2 சிற்றாறு-1 24.6, பெருஞ்சாணி 19.8 புத்தன் அணை 17.6 பேச்சிப்பாறை 12.4, பாலமோர் 5.2 முள்ளங்கினாவிளை 4.6 திற்பரப்பு 4.5, தக்கலை, களியல், மாம்பழத்துறையாறு 3.2. 

    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
    • தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அங்கு அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணைக்கிடங்கு, களியல், கோழிப்போர்விளை, குழித்துறை பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலும் விடிய விடிய மழை பெய்தது.

    சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2, அணைகள் நிரம்பி வருவதையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மதகு வழியாக 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-1 அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மோதிரமலை குற்றியாறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37 அடியாக இருந்தது. அணைக்கு 1487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.35 அடியாக உள்ளது. அணைக்கு 723 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1-அணை நீர்மட்டம் 16.76 அடியாக உள்ளது. அணைக்கு 1158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரி நீராகவும் மதகுகள் வழியாகவும் 737 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் உபரி நீரை வெளியேற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அணை நீர்மட்டத்தை அவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 16.86 அடியாக உள்ளது. அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 43.14 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடியாக உள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்.
    • பொதுமக்கள் பரிதவிப்பு.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளை நிலங்க ளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகி றார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள் ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பரித விப்பிற்கு ஆளாகியுள்ள னர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப் படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை யின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலு காவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்கா ரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை அருகே உள்ள ஆரியங்காவு பாலருவியில் சில நாட்களாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பாலருவிக்கு குளிக்க சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் மீண்டும் குற்றாலத்திற்கு புறப்பட்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 3-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இதையடுத்து பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தடை விதிக்கப்பட்டு பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தையொட்டி கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். குறிப்பாக கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளான சாடிவயல், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து போளுவாம்பட்டி வனசரக வனத்துறையினர் கூறும், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் கோவை குற்றால அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர்அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி யதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீ ரின் அளவும் அதிகரிக்க ப்பட்டது.

    அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவி டப்பட்டு ள்ளதால் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது ப்பணி த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பொது ப்பணித்து றை, வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் மூலம் கண்காணி ப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டு ள்ளது. தொட ர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொது ப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
    • மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லை.

    இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி பானு (வயது 10). இவர் கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார்.

    மலை கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றைக் கடந்து சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

    3 நாட்களாக வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். நேற்று ஓரளவு ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சிறுமின் உடலை சுமந்து சென்று ஆற்று வெள்ளத்தை கடந்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உடலை அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் :-

    தும்முடி புட்-லட்சுமிபுரம் இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

    கடந்த தேர்தலின்போது தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர் ஆட்சிக்கு வந்தவுடன் மேம்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்தார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.

    முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை குறித்த நேரத்திற்கு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாததால் உயிர் இழப்புக்கள் ஏற்படுகிறது என்றனர்.

    • மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    ×