search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரியை"

    • அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் கொள்ளளவை நெருங்கியதால் அணை களுக்கு வந்த தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் படிப்படியாக குறைந்து வந்தது. 2 நாட்களாக தூறலுடன் மட்டும் நின்றது. நேற்று காலை வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஆனால் இது சற்றுநேரம் தான் நீடித்தது. மதியம் 2 மணிக்கு வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகை யில் மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், தக்கலை, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழை குமரியை புரட்டிப் போட்டது. நாகர்கோவில் கோர்ட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, நாகராஜா கோவில் கிழக்கு வாசல், ஆசாரிமார் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது.

    திங்கள் சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சில சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற வர்கள் பெரிதும் தவிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 117 வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன. இந்த நிலையில் கல்குளம் தாலுகாவில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

    குருந்தன்கோட்டில் 60 மில்லி மீட்டரும், கொட்டா ரத்தில் 57.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 54.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரண மாக அணைகளுக்கு நீர்வ ரத்தும் அதிகமாக உள்ளது. சிற்றாறு அணைகள் கொள்ளளவை நெருங்கி வருவதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மழையின் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.17 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 836 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குருந்தன்கோடு 60, கொட்டாரம் 57.2, நாகர் கோவில் 54.2, இரணியல் 51, மாம்பழத்துறையாறு 48.4, ஆணைக்கிடங்கு 46.8, மயிலாடி 45.2, குளச்சல் 32, அடையாமடை 23, தக்கலை 22, குழித்துறை 16, பூதப் பாண்டி 15.8, முள்ளங்கினா விளை 13.6, கன்னிமார் 12.4, களியல் 11, திற்பரப்பு 10.8, கோழிப்போர்விளை 10.5, சுருளகோடு 10.2, ஆரல்வாய் மொழி 9.4, பேச்சிப்பாறை 3.2, பெருஞ்சாணி 7.6, புத்தன் அணை 7, சிற்றாறு 2- 5.2, முக்கடல் அணை 5.2.

    • குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்.
    • பொதுமக்கள் பரிதவிப்பு.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளை நிலங்க ளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகி றார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள் ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பரித விப்பிற்கு ஆளாகியுள்ள னர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப் படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை யின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலு காவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்கா ரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×