search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகுந்த"

    • அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் கொள்ளளவை நெருங்கியதால் அணை களுக்கு வந்த தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் படிப்படியாக குறைந்து வந்தது. 2 நாட்களாக தூறலுடன் மட்டும் நின்றது. நேற்று காலை வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஆனால் இது சற்றுநேரம் தான் நீடித்தது. மதியம் 2 மணிக்கு வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகை யில் மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், தக்கலை, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழை குமரியை புரட்டிப் போட்டது. நாகர்கோவில் கோர்ட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, நாகராஜா கோவில் கிழக்கு வாசல், ஆசாரிமார் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது.

    திங்கள் சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சில சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற வர்கள் பெரிதும் தவிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 117 வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன. இந்த நிலையில் கல்குளம் தாலுகாவில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

    குருந்தன்கோட்டில் 60 மில்லி மீட்டரும், கொட்டா ரத்தில் 57.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 54.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரண மாக அணைகளுக்கு நீர்வ ரத்தும் அதிகமாக உள்ளது. சிற்றாறு அணைகள் கொள்ளளவை நெருங்கி வருவதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மழையின் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.17 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 836 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குருந்தன்கோடு 60, கொட்டாரம் 57.2, நாகர் கோவில் 54.2, இரணியல் 51, மாம்பழத்துறையாறு 48.4, ஆணைக்கிடங்கு 46.8, மயிலாடி 45.2, குளச்சல் 32, அடையாமடை 23, தக்கலை 22, குழித்துறை 16, பூதப் பாண்டி 15.8, முள்ளங்கினா விளை 13.6, கன்னிமார் 12.4, களியல் 11, திற்பரப்பு 10.8, கோழிப்போர்விளை 10.5, சுருளகோடு 10.2, ஆரல்வாய் மொழி 9.4, பேச்சிப்பாறை 3.2, பெருஞ்சாணி 7.6, புத்தன் அணை 7, சிற்றாறு 2- 5.2, முக்கடல் அணை 5.2.

    • கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    ×