search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திடீர் வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்
    X

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதை காணலாம்.

    திடீர் வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்

    • தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தையொட்டி கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். குறிப்பாக கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளான சாடிவயல், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து போளுவாம்பட்டி வனசரக வனத்துறையினர் கூறும், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் கோவை குற்றால அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×