search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருது"

    • அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • பழங்குடியினர் நல அலுவலகத்தில் 13.11.2023 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    திருவாரூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோரில், இந்த ஆண்டு டாக்டர். அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் வரும் 13.11.23 தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    • போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
    • தொழில்நுட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் பிரபாகரன். இவர் மருத்துவத்தில் பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க "சிறந்த குடிமகன் விருது" இவருக்கு கிடைத்துள்ளது. கொரிய குடியரசின் சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்நிலையத்தில் 78-வது போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது குரல்ஃபிஷிங்கிற்கு எதிராக இவர் தன்னார்வத் தொண்டு புரிந்தார். இந்த பங்களிப்பிற்காக கொரிய தேசிய போலீஸ் ஏஜென்சியில் இருந்து சிறந்த குடிமகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

    சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்துறை தலைவர் ஹாங்சி யோக்ஜி, துணை காவல் ஆணையர் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழும் நினைவுப்பரிசும் டாக்டர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.

    விருதுக்காக பரிந்துரை செய்த வெளியுறவுப் பிரிவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லீசியோஹூன்கிற்கு டாக்டர் பிரபாகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    டாக்டர் பிரபாகரன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பு தலைவராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குரல்ஃபிஷிங்தடுப்பு, போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார் .

    அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு இந்திய தூதரகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக தென் கொரியா சென்றபோது தன்னார்வலராக பணி செய்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உயிர் தொழில்நு ட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா போன்ற விருதுகள் வாங்கியுள்ளது
    • மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் எம்.எஸ்.ரோடு, வடசேரி பஸ் நிறுத்தம் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றது. ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்.

    சிறந்த ேசவைக்கான சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா விருது, தங்க நட்சத்திர விருது மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விஜிலென்ஸ் கவுன்சிலர் ஆப் இந்தியா அமைப்பு சார்பாக OVCI AWARDS விருதில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனத்துக்கு மனித நேய விருது, சிறந்த நிர்வாகத்திற்கான விருது வழங்கப்பட்டது. விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் அம்பா சிடர் டாக்டர் சத்திய கண்ணதாசன், புதுச்சேரி மாநில சபாநாயகர் எம்பலம் செல்வம் எம்.எல்.ஏ., பாண்டிச்சேரி மாநிலத்தின் ெஜயில் சூப்பிரண்டு மத்திய சிறைச்சாலை பாஸ்கரன் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் அக்ஷயா ஹோம் கேர் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனுக்கு விருதுகளை வழங்கினர்.

    வீட்டில் தங்கி பணி புரிவதற்கும், காலை முதல் மாலை வரை, மாலை முதல் காலை வரை பணிபுரி வதற்கும், நோயாளிகளை கவனிப்ப தற்கும், முதியோ ர்களை கவனிப்பதற்கும், சமையல், வீட்டு வேலை செய்வதற்கும் சிறந்த பணியாளர்களை தேர்ந்தெ டுத்து சிறந்த முறையில் ேசவை செய்து வருகின்றது. மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.

    இதன் உரிமையாளர் மணிகண்டன் கூறுகையில், ஆதரவற்றோர்கள்,கண வனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைகள், பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள் மற்றும் வறுமையால் வாழும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னுடைய தாயார் ராஜாமணி நினைவாக இந்த சேவையை செய்து வருகின்றேன். இலவசமாக வேலை தேவைப்படுவோர் ஆண்களும், பெண்களும் நேரில் வந்து பதிவு செய்த பின்னர் வேலை வழங்குகின்றோம்.

    மேலும் பி.எஸ்.சி.நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். எங்களுக்கு வடசேரி கிளையை தவிர வேறு கிளைகள் கிடையாது. மேலும் விபரங்களுக்கு 99447 38282, 63857 71261, 63857 71262, 85263 00300 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

    • தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.

    கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.

    இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.

    விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை மாலை விழா நடந்தது.
    • கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் கலை மாலை விழா நடந்தது. இதில் கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் நித்தி யானந்தம் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற துணை தலைவர் செல்வமணி, அரசு வழக்கறிஞரும், எழுத்தாளருமான கவிஞர் அன்னக்கொடி பங்கேற்ற னர்.

    இவ்விழாவில் மனிதநேய மருத்துவ சேவைக்கான விருதுகள் மருத்துவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அறுவை சிகிச்சை மருத்துவர் லட்சுமணனுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜிற்கும் வழங்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்து வரும் பிள்ளையார் நத்தம் கிரா மத்தை சேர்ந்த அய்யக்காள் சிறந்த ஊர்க்காவல்படை காவலர் திலகவதி, சிறந்த சிறு கதை எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர் முனியாண்டி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

    • அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் அரசு மருத்துவமனைக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் வருடம் தோறும் ரத்த தானம் வழங்கி வருகிறது. கடந்த 2022-

    23-ம் கல்வியாண்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அதிக அளவு ரத்த தானம் வழங்கி ரத்தம் தேவைப்பட்ட நோயாளி களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து உயிர் காத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அதிக அளவு ரத்த தானம் செய்த சிறந்த கல்லூரி என்ற கோப்பையை அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கி கவுரவித்தது. கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    சிறந்த முறையில் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் முனியாண்டி, ரத்த தான முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, சகாயவாணி, விக்னேசுவரசீமாட்டி, மணிமேகலை, கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் ரத்த தானம் செய்த மாணவ-மாண வியர்கள் பகவதிக்கண்ணன், நற்குணபாண்டியன், மணிக்குமார், வீரமுருகன், கிருஷ்ணகுமார், உதய பிரகாஷ், சுதாகர், சிந்து பைரவி, ராஜசுபத்தாரா, மாயாண்டி, கார்த்திக், தங்கராஜ், உமாமகேசுவரன், வேல்முருகன் உள்ளிட்டோ ரையும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு மாண வர்களை ஊக்கப்படுத்திய மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியையும், கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா மற்றும் முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
    • கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.

    என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

    வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.

    அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.
    • கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்ன ர்கள் காலத்தில் உருவாக்க ப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குள த்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

    இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீ ர்வழிப்பாதை அமைக்கப்ப ட்டது.

    காலப்போக்கில் பராமரி ப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

    இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டு உள்ளன.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டவிருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

    இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்த தற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இதில் கலாச்சார பிரிவில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு 3-ம் இடம் கிடைத்தது .

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    அப்போது இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் , தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதனிடம் வழங்கி பாராட்டினார் . அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரியலூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் தோட்டக்கலை மற்றும்ம லைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்வி வசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு மூலம் விவசாயிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் செப்.30-க்குள் தோட்டக்கலைதுறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • விழாவில் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது.
    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 33-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் கோவை மல்லெர் பல் மருத்துவமனையின் தலைமை பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் திருமலைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவி ஹர்சிதாஸ்ரீ வரவேற்று பேசினார். மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது. மாணவி ஸ்வேதா விழாவை தொகுத்து வழங்கினார்.

    ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

    செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுச் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ -மாணவிகளுக்கு கல்வியில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தேர்ச்சிக்கான விருதும், பல்துறை விருது, உத்வேக விருது, வருகை பதிவேட்டிற்கான விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமலை வேலு சிறப்புரையாற்றினார்.

    மாணவி சந்திய பிரியா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கலாம்.
    • தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி, செப்.21-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விள ங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கலாம்.

    அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம் பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறை யான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். மேலும், இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. விருது பெறுப வர்களுக்கு முதல் பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வரைவோலை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க இத்திட்ட த்தின்கீழ் தோட்டக் கலை த்துறை இணைய தளத்தில் விண்ண ப்பிக்கலாம் அல்லது விண்ண ப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×