search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது
    X

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது

    • அரியலூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் தோட்டக்கலை மற்றும்ம லைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்வி வசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு மூலம் விவசாயிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் செப்.30-க்குள் தோட்டக்கலைதுறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×