search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது
    X

    சிறந்த குருதியாளர் விருது அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

    அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது

    • அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் அரசு மருத்துவமனைக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் வருடம் தோறும் ரத்த தானம் வழங்கி வருகிறது. கடந்த 2022-

    23-ம் கல்வியாண்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அதிக அளவு ரத்த தானம் வழங்கி ரத்தம் தேவைப்பட்ட நோயாளி களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து உயிர் காத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அதிக அளவு ரத்த தானம் செய்த சிறந்த கல்லூரி என்ற கோப்பையை அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கி கவுரவித்தது. கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    சிறந்த முறையில் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் முனியாண்டி, ரத்த தான முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, சகாயவாணி, விக்னேசுவரசீமாட்டி, மணிமேகலை, கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் ரத்த தானம் செய்த மாணவ-மாண வியர்கள் பகவதிக்கண்ணன், நற்குணபாண்டியன், மணிக்குமார், வீரமுருகன், கிருஷ்ணகுமார், உதய பிரகாஷ், சுதாகர், சிந்து பைரவி, ராஜசுபத்தாரா, மாயாண்டி, கார்த்திக், தங்கராஜ், உமாமகேசுவரன், வேல்முருகன் உள்ளிட்டோ ரையும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு மாண வர்களை ஊக்கப்படுத்திய மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியையும், கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா மற்றும் முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×