search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மருந்து"

    • போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
    • தொழில்நுட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் பிரபாகரன். இவர் மருத்துவத்தில் பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க "சிறந்த குடிமகன் விருது" இவருக்கு கிடைத்துள்ளது. கொரிய குடியரசின் சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்நிலையத்தில் 78-வது போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது குரல்ஃபிஷிங்கிற்கு எதிராக இவர் தன்னார்வத் தொண்டு புரிந்தார். இந்த பங்களிப்பிற்காக கொரிய தேசிய போலீஸ் ஏஜென்சியில் இருந்து சிறந்த குடிமகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

    சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்துறை தலைவர் ஹாங்சி யோக்ஜி, துணை காவல் ஆணையர் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழும் நினைவுப்பரிசும் டாக்டர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.

    விருதுக்காக பரிந்துரை செய்த வெளியுறவுப் பிரிவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லீசியோஹூன்கிற்கு டாக்டர் பிரபாகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    டாக்டர் பிரபாகரன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பு தலைவராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குரல்ஃபிஷிங்தடுப்பு, போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார் .

    அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு இந்திய தூதரகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக தென் கொரியா சென்றபோது தன்னார்வலராக பணி செய்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உயிர் தொழில்நு ட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
    • பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு கொடூரத்தை கணவர் அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவரது மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டொமினிக்குக்கு குரூர எண்ணங்கள் உருவாகின. அதன் வெளிப்பாடாக போதை மருந்து கொடுத்து மனைவி மயங்கி படுக்கையில் சாய்ந்த உடன் வெளியில் உள்ள ஆண்களை வீட்டுக்கு அழைத்து மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்து வந்துள்ளார்.

    இந்த கொடூரம் நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ நடைபெறவில்லை. ஆண்டுக்கணக்கில் நடந்துள்ளது. 2011 முதல் 2020 வரை இந்த கொடூரத்தை டொமினிக் அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் பிராங்கா கோஸ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனச்சோர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து கணவரின் கொடூர செயல்களை அறிந்து உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் டொமினிக்கை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 10 ஆண்டுகளில் 92 கற்பழிப்பு சம்பவங்களை உறுதி செய்தனர். இதில் 26 வயது இளைஞர் முதல் 73 வயது முதியவர் வரை மொத்தம் 51 ஆண்கள் அவரை சீரழித்துள்ளது அறிந்து திடுக்கிட்டனர். பின்னர் கணவர் உள்ளிட்ட 51 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர், நகராட்சி கவுன்சிலர், வங்கி, ஐ.டி. ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோரும் அடங்குவர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்டால் அடுத்த சில நொடிகளில் சம்பந்தப்பட்டவர் மயக்க நிலைக்கு சென்று விடுவார். பின்னர் எழுந்திருக்க சில மணி நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் ஆண்களை அழைத்து மனைவியை அவர் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

    பின்னர் அதனை வீடியோவில் பதிவு செய்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் ஒரு குரூப்பை அவர் உருவாக்கி இருந்துள்ளார். இதில் போதை பொருள் பயன்படுத்தும் பல்வேறு ஆண்கள் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தில் சந்தேகம் வருவதை தடுக்க இரவு நேரங்களிலேயே இந்த கொடூரத்தை அவர் அரங்கேற்றி வந்துள்ளார்.

    மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வரும் ஆண்களை சமையலறையில் ஆடைகளை அவிழ்க்க செய்துள்ளார். பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போது, டொமினிக் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் எந்த வன்முறை அல்லது அச்சுறுத்தலையும் செய்யவில்லை. ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்கள் விரும்பும் இடத்துக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு திரும்ப சுதந்திரம் இருப்பதாக வாதிட்டுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் ஒரு சில ஆண்கள் டொமினிக்கின் மனைவிக்கு விருப்பமான பங்கேற்பாளர்கள் அல்ல என கூறினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கொடூர கணவனின் பிடியில் இருந்து தப்பிக்க விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பத்தாண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து ஆண்களை அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு கழகம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை உரையாற்றினார். இளையான்குடி வட்டார மருத்துவ அலுவலர் அருண் அரவிந்த் ரிஷிஸ், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா, இளையோர் செஞ்சிலுவைச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரையில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போதையின் பிடியில் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

    மதுரையில் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட வருங்கால தலைமுறையை பாதிக்கும் போதைமருந்து கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை முத்துப்பட்டி சுடுகாட்டு பகுதியில் போதை மருந்துகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    பாண்டியன் நகர் சுடுகாடு அருகே 10 பேர் கும்பல் போதை மருந்து, மாத்திரை, ஊசிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி யது. அவர்களில் 2 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பாக்கெட் வலி நிவாரணி மருந்துகள், 5 ஊசி மருந்து, மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்த ஆஷிக்அலி (26), சாலையூர் பக்கீர்மஸ்தான் மகன் சையதுமுகமதுஆஸ்பெக் (19) என்பது தெரியவந்தது.

    வலி நிவாரணி மருந்து, மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்தி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விற்பனை செய்த மேற்கண்ட 2 வாலிபர்களையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.

    மெடிக்கல் கடைகளில் பிரசவ கால வலி நிவாரணியாக சிறப்பு ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை டாக்டரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஒரு சில கும்பல் மருந்து கடைக்காரர்களிடம் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்கண்ட ஊசி மருந்து மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதை மருந்தாக விற்பனை செய்து வருகிறது.

    இதன் அடிப்படையில் மதுரை நகர் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுப்பிரமணியபுரத்தில் போதை மருந்து, மாத்திரைகளுடன் 2 பேரை கைது செய்துள்ளோம். மதுரையில் போதை மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

    • தொண்டி அரசு ஆண்கள் பள்ளியில் போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடந்தது. இப்பள்ளியைச் சேர்ந்த 260 மாணவர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாககூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, பள்ளிப்பருவத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், முதல் தகவல் அறிக்கை உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    ×