search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு கழகம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை உரையாற்றினார். இளையான்குடி வட்டார மருத்துவ அலுவலர் அருண் அரவிந்த் ரிஷிஸ், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா, இளையோர் செஞ்சிலுவைச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×