search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை மாலை விழா
    X

    கலை மாலை நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    கலை மாலை விழா

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை மாலை விழா நடந்தது.
    • கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் கலை மாலை விழா நடந்தது. இதில் கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் நித்தி யானந்தம் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற துணை தலைவர் செல்வமணி, அரசு வழக்கறிஞரும், எழுத்தாளருமான கவிஞர் அன்னக்கொடி பங்கேற்ற னர்.

    இவ்விழாவில் மனிதநேய மருத்துவ சேவைக்கான விருதுகள் மருத்துவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அறுவை சிகிச்சை மருத்துவர் லட்சுமணனுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜிற்கும் வழங்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்து வரும் பிள்ளையார் நத்தம் கிரா மத்தை சேர்ந்த அய்யக்காள் சிறந்த ஊர்க்காவல்படை காவலர் திலகவதி, சிறந்த சிறு கதை எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர் முனியாண்டி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

    Next Story
    ×