search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாணயங்கள்"

    • நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    • மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்டம் ஷிரஹட்டியில் உள்ள பாவைக்யதா சன்ஸ்தான் மஹா பீடமானது பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், யானை சம்பிகாவின் 60-வது வருட மடத்திற்கு சேவையாற்றுவதையும் குறிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் துலாபார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி அங்குள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.

    இங்கு மிகப்பெரிய தராசு கட்டி தொங்கவிடப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் மடத்து யானை நிறுத்தப்பட்டது. பின்னர் யானையின் முதுகில் தங்க முலாம் பூசப்பட்ட பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமி சிலை வைக்கப்பட்டது.

    இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எடை தராசின் ஒரு பக்கத்தில் யானை சம்பிகாவும் மறுபக்கத்தில் 5,555 கிலோ 10 ரூபாய் நாணயங்களுடன் அவற்றின் கூட்டு எடைக்கு சமமாக வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 376 பைகளில் வாங்கப்பட்ட ரூ.73,40,000 மதிப்புள்ள நாணயங்கள் துலாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன.


    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநில அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் காந்த்ரே, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக சட்டப் பேரவை தலைவர் பசவராஜ் ஹோரட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    44 அடி நீளம், 30 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட தராசு ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையது. இந்த தராசு நிரந்தரமாக மடத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என ஏற்பாட்டு் குழு உறுப்பினர் சந்திரசேகர் கோகாக் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
    • ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் கிராமம் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 57). தனியார் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சாந்தி, தனது கணவர் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜீ தனது மனைவி சாந்திக்கு மாதந் மாதம் ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டுமென உத்தர விட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் சாந்தி நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும் என மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜீ நேற்று , சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியரித்துடன் பார்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உலக பணத்தாள்கள்-நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது
    • தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில்

    திருச்சி:

    திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உலக பணத்தாள்கள், நாணயங்கள், புழங்கு பொருட்கள் குறித்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்சி-தஞ்சை திருமண்டல குருத்துவ செயலாளரும், பள்ளி தாளாளருமான சுதர்சன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

    தலைமை ஆசிரியர் ஞான சுசீஹரன், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுரேஷ், பிரபாகர் சம்பத் ஒருங்கிணைப்பில் திருச்சி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், ரமேஷ், சந்திரசேகரன், தாமோதரன், பத்ரி நாராயணன் உட்பட பலர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    அதில் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளின் நாணயங்கள் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.அல்ஜீரிய தினார், அங்கோலா குவான்சா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா கிழக்கு கரீபியன் டாலர், அர்ஜென்டினா பேசோ, ஆஸ்திரேலிய டாலர், ஆஸ்திரியா யூரோ, அஜர்பைஜான் மனாட், பஹாமாஸ் டாலர், பஹ்ரைன் தினார், பங்களாதேஷ் டாக்கா, பார்படாஸ் டாலர், பெலாரஸ் ரூபிள், பெல்ஜியம் யூரோ, புருனே டாலர், புருண்டி பிராங்க், கம்போடியா ரியல், கனடா டாலர், சிலி பெசோ, சீனா யுவான், கொலம்பியா பெசோ, சைப்ரஸ் யூரோ, குடியரசு காங்கோ பிராங்க், கரீபியன் டாலர், டொமினிக்கன் குடியரசு பெசோ, அமெரிக்க டாலர், எஸ்டோனியா யூரோ, பின்லாந்து யூரோ, ஜெர்மனி யூரோ, இந்திய ரூபாய், இந்தோனேசிய ரூபாய், ஈரான் ரியால் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

    மேலும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ கால நாணயங்களும் மலையமான், சம்பூர ராயர், மதுரை நாயக்கர், விஜயநகர், ஆற்காடு நவாப், கோனேரி ராயன், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா நாணயங்களுடன் சுடுமண்ணலான காதணிகள், புதை உயிரி படிமங்கள், டயானா சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகள், மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் மகாத்மா காந்தி சிறப்பு அஞ்சல் தலை அஞ்சல் உறைகள் சிறப்பு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    ×