search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யானையின் எடைக்கு நிகராக 10 ரூபாய் நாணயங்கள்
    X

    யானையின் எடைக்கு நிகராக 10 ரூபாய் நாணயங்கள்

    • நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    • மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்டம் ஷிரஹட்டியில் உள்ள பாவைக்யதா சன்ஸ்தான் மஹா பீடமானது பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், யானை சம்பிகாவின் 60-வது வருட மடத்திற்கு சேவையாற்றுவதையும் குறிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் துலாபார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி அங்குள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.

    இங்கு மிகப்பெரிய தராசு கட்டி தொங்கவிடப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் மடத்து யானை நிறுத்தப்பட்டது. பின்னர் யானையின் முதுகில் தங்க முலாம் பூசப்பட்ட பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமி சிலை வைக்கப்பட்டது.

    இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எடை தராசின் ஒரு பக்கத்தில் யானை சம்பிகாவும் மறுபக்கத்தில் 5,555 கிலோ 10 ரூபாய் நாணயங்களுடன் அவற்றின் கூட்டு எடைக்கு சமமாக வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 376 பைகளில் வாங்கப்பட்ட ரூ.73,40,000 மதிப்புள்ள நாணயங்கள் துலாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன.


    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநில அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் காந்த்ரே, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக சட்டப் பேரவை தலைவர் பசவராஜ் ஹோரட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    44 அடி நீளம், 30 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட தராசு ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையது. இந்த தராசு நிரந்தரமாக மடத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என ஏற்பாட்டு் குழு உறுப்பினர் சந்திரசேகர் கோகாக் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×