search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • நகராட்சி கமிஷனர் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டினர்.
    • பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கு உள்ள பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    எனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்து வெளியூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இந்தநிலையில் அந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் ஒருசிலர் வெளி வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

    இருந்தபோதிலும் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரில் ஒரு சிலர், மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தை காலையில் நிறுத்தி விட்டு, மாலையோ அல்லது இரவோ வந்து எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ -மாணவிகள் நிற்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதாவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அவர் அதிரடியாக பஸ் நிலையத்திற்கு வந்தார். அவருடன் பொறியாளர் சுகந்தி மற்றும் நகராட்சி ஊழியர்களும் வந்திருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாகனங்கள் தடையை மீறி நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டு போட்டு பூட்டினார்.

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், பஸ் நிலைய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒருசிலர் காலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் மாலையோ அல்லது இரவோ வந்து வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.

    இதனால் பேருந்து பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்ச ரித்தும் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு பூட்டு போட்டு உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து உரிய அபராதம் செலுத்திய பின்னரே, வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள்தொடரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இணைப்பதிவாளரிடம் மனு
    • விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று நிர்வாகிகள் இணைப்பதிவாளர் சிவகாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிடில் வரும் அக்டோபர் 3-ந் தேதி வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்து பணியாளர்களும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அப்போது செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.

    • கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது.
    • சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் சென்னை மாநகரம் முழுவதும் சாலையோரமாக நீண்ட நாட்களாக 1308 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாலை யோரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து அவைகளை ஏலத்தில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் என 132 வாகனங்கள் அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளன. சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    இதில் 14 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய மண்டலத்தில் 644 வாகனங்களில் 101 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தெற்கு மண்டலத்தில் 393 வாகனங்களில் 17 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை ஓரமாக நிறுத்தப்ப ட்டுள்ள வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களா? என்பது பற்றி போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது போன்ற வாகனங்களின் வழக்குகளை விரைந்து முடித்து அவைகளையும் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பல தெருக்களில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நெரிசலும் நெருக்கடியும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
    • வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உரிமை கோரப்படாத 319 இருசக்கர வாகனங்கள் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

    வாகனங்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் வாகனத்தின் ஏலத்தொகையில் இருந்து 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்த வேண்டும்.

    வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவலை திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
    • வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

    வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.

    • பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை வருவாய் துறையினரால் அமராவதி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை

    தக்கலை :

    கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் தினமும் அதிக அளவில் சென்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனரக லாரிகள் அதிக அளவு பாரத்துடன் செல்வதால், குமரி மாவட்ட சாலைகள் சேதமடைவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும் கனரக லாரிகள் செல்வது குறைந்தபாடில்லை. இந்த நிலையில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

    இதனை முன்னிட்டு தற்போது அதிக அளவிலான கனரக லாரிகள் நேற்று முதல் கேரளாவுக்கு படையெடுத்து சென்று வருகின்றன. இன்று அதிகாலையும் தக்கலை, சித்திரங்கோடு, முட்டைக்கோடு, செம்பருத்திவிளை வழியாக கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்றன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு பள்ளி வாகனங்கள் செல்ல தொடங்கிய பிறகும், கனரக லாரிகள் சென்றதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணை தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் திரண்டு செம்பருத்திவிளை சந்திப்பில், கனரக லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கனரக லாரிகள் வரிசையாக சாலையில் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொற்றிகோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

    உடுமலை

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.

    ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    • சென்டர் மீடியனில் மோதி தினமும் விபத்தில் வாகனங்கள் சிக்குகின்றன.
    • எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவுமி இல்லா ததால் தினந்தோறும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளுக்கு மூலப்பொ–ருட்கள் மற்றும் உற்பத்தி பொருட் களை கொண்டு செல்ல தினசரி நூற்றுக்கணக் கான கனரக வாகனங்களும் இவ்வழியே செல்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. உயரம் குறைவாக உள்ள சென்டர் மீடியனில் பேருந்து கள், கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    வளைவு பகுதி யில் எச்சரிக்கை பலகைகள் இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் கள் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    இந்தநிலையில் கோயம் புத்தூரில் இருந்து ராஜபா ளையம் பகுதியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட் களை ஏற்றி வந்த சரக்கு லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியில் சரக்குகள் அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் மதுரை-கொல் லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு லாரியில் இருந்த சரக்குகள் இறக்கப் பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத் தப்பட்ட பின் போக்குவ ரத்து சீரானது.

    அதே போல் நேற்று இரவு அதே சென்டர் மீடியனில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம் மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்கா ணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந் தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர்.

    மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அகற்றப்பட்டு புதிய நம்பர் பிளேட் வைத்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் 

    • வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.
    • காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் பலவித குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வைப்பதற்கு இடமில்லாமல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு வைத்துள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.

    இவற்றை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் இந்த வாகனங்களும் நல்ல முறையில் இருக்கும் போது பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.

    இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படவில்லை.

    எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.

    எனவே நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

    ×