search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vechicles"

    • தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
    • வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உரிமை கோரப்படாத 319 இருசக்கர வாகனங்கள் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

    வாகனங்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் வாகனத்தின் ஏலத்தொகையில் இருந்து 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்த வேண்டும்.

    வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவலை திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    • பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை வருவாய் துறையினரால் அமராவதி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • ஈஸ்வரியின் சேலை எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் டயரில் சிக்கியது.
    • சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 56). சம்பவத்தன்று வெள்ளகோவில் -தாராபுரம் ரோட்டில் சேரன் நகர் அருகே கணவன்- மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரியின் சேலை எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் டயரில் சிக்கியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×