என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்13 Sep 2023 10:41 AM GMT
- பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை வருவாய் துறையினரால் அமராவதி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X