search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கங்களில் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்க கூடாது
    X

    கூட்டுறவு சங்கங்களில் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்க கூடாது

    • மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இணைப்பதிவாளரிடம் மனு
    • விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று நிர்வாகிகள் இணைப்பதிவாளர் சிவகாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிடில் வரும் அக்டோபர் 3-ந் தேதி வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்து பணியாளர்களும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அப்போது செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×