search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை"

    • ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார்.
    • திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோகண்டி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார். கலெக்டர் ராகுல்நாத்தின் இந்த செயல்முறையை மாணவ-மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் ராகுல்நாத் பாராட்டினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பவானி உடன் இருந்தார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • மேலப் போலகம் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணியை நாகை எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அப்போது வலியுறுத்தினார்.

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரம் தொடக்க ப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், எரவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், போலகம் ஊராட்சி மேலப் போலகம் தொட க்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைந்து அங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.
    • ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சியில், 2021-22-ம் ஆண்டிற்கான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் முத்துபிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் அபிராமி சுந்தரம், துணை செயலாளர்கள் யேசுதாஸ், நேரு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ராஜேந்திரன், உதயம் கோவிந்தராஜன், இஸ்ரேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முரளி, மார்க்கெட் சங்கர், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ், உதவி பொறியாளர் அய்யப்பன், ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
    • பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே மாணவ-மாணவிகள் பாடம் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒசநகரில் உள்ள இந்த அரசு பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் வகுப்பறையில் கசிகிறது.

    இதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படியே வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். பாடம் நடத்தும் ஆசிரியரும் குடையை பிடித்தப்படியே பாடம் நடத்தி வருகிறார். இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பள்ளிக்கு இந்த அவல நிலையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதி மக்கள் பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனேயே வகுப்பறையில் இருக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கலெக்டர் பார்வையிட்டார்.
    • சத்துணவு கூட்டத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத் திறன் பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவனாக ஆங்கில பாட நூலில் உள்ள வாக்கியங்களை படிக்க சொல்லி கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார்.

    மேலும் ஊராட்சி தொடக்கப்பள்ளி சென்ற கலெக்டர் மகாபாரதி 1-ம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் பள்ளி பாடல்கள் பாட சொல்லிகேட்டறிந்தார்.

    அப்போது மாணவ மாணவிகள் உற்சாகமாக பாடத்திட்டத்தில் உள்ள பாடல்களை கலெக்டர் முன்பு ஆடிப்பாடினர். தொடர்ந்து அங்குள்ள

    சத்துணவு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தயார் செய்து வைக்கப்பட்டி ருந்த உணவுகளின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அரிசி,துவரம் பருப்பு, இருப்புகளை ஆய்வு செய்ததோடு எலக்ட்ரானிக் தராசின் பயன்படுத்தி பொருட்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும் அரிசி, சர்க்கரை ஆகியவை மூட்டைகளில் சேதம் அடைந்து சிந்தியிருப்பது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, எலிகள் நுழைந்து பொருட்களினை சேதம் ஏற்படுத்துவதாக கடை விற்பனையாளர் கூறினார்.

    எலிகள் நுழையா தவாறு பாதுகாப்பாக பொருட்களை வைத்திட தேவையான நடவடிக்கை களை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார்.

    ஊராட்சியில் புதிதாக ரூ. 28 .25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    அப்பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு சென்ற ஆட்சியர் மகாபாரதி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகளிடம் காலை என்ன உணவு தரப்பட்டது என்று கேட்டறிந்து அந்த உணவினை வரவழைத்து அதன் ருசி, தரத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக கீழையூர் காத்திருப்பு இழப்பு சாலை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணிகள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆட்சியர் பார்வைக்கு ஆய்வு செய்தார் பின்னர் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார் ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய உதவி பொறி யாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
    • நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன் (22-வது வார்டு), பத்மாவதி (21-வது வார்டு), பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்துக்கான காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.

    இதில் 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சாலியமங்களம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு ஆய்வு செய்தார்.

    முன்னதாகநம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்படுத்து வதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் சாலியமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி, புதுப்பிக்கும் பணிகளையும் கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

    ஆய்வின்போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்.

    அமானுல்லா, உதவி பொறியாளர் கதிரேசன்,ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் செந்தில்கு மார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன். பணி மேற்பார்வையாளர் மீரா. ஒப்பந்ததாரர் சண்.சரவணன்,ஊராட்சி செயலாளர் ஜெகத்குருமற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டார்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில், 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வெள்ளத்திடல், வாணியத் தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான இடங்களை பார்வை யிட்டார்.திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், ரிபாயுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

    • புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • பேராவூரணி அரசு பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டிடம் கட்டப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ரூபாய்.1 கோடியில் பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி, நவீன நூலகம் உள்ளிட்டவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், புனல்வாசல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்,

    சொர்ணக்காடு ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.21.45 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×