search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    X

    வகுப்பறை கட்டிடங்களை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

    • கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.
    • ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சியில், 2021-22-ம் ஆண்டிற்கான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் முத்துபிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் அபிராமி சுந்தரம், துணை செயலாளர்கள் யேசுதாஸ், நேரு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ராஜேந்திரன், உதயம் கோவிந்தராஜன், இஸ்ரேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முரளி, மார்க்கெட் சங்கர், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ், உதவி பொறியாளர் அய்யப்பன், ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×