search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல்"

    • தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
    • தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது

    கடலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் அமாவாசை மற்றும் சஷ்டி விரதம் தொடங்கு வதால் கடலூர் திருப்பா திரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க் கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விழாக்கா லங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந் துள்ளது. அதன்படி அரும்பு மற்றும் மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. தற்போது மழை காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி:

    காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், வட்டார துணை தலைவர் மரிய ஜான், செயல் தலைவர் மிக்கேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
    • திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை

    மண்ணச்சநல்லூர்,  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் பள்ளி படிப்புகாகவும், பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் சமயபுரம், திருப்பைஞ்சீலி எதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான பள்ளி மாணவர்கள் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்.எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் மண்ணச்சநல்லூர் பணிமனையில் இருந்து சமயபுரம் திருப்பைஞ்சீலி மற்றும் எதுமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

    • ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்
    • கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பு மழை அளவை காட்டிலும் 323.73 மில்லி மீட்டர் கூடுதலாகும்.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 30 ஏரிகள்

    முழுமையாக நிரம்பி யுள்ளன.

    23 ஏரிகள் நிரம்பாத நிலையில் உள்ளன. மீதமுள்ள 26 ஏரிகள் பாதி அளவிலேயே நிரம்பி இருக்கின்றன. இன்னும் ஓராண்டுக்கு வேளாண் பணிகளுக்கு தேவையான நீர் இருப்பு நிரம்பிய ஏரிகள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். நிரம்பிய ஏரி களின் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள விவசாயிகள், தேங்கியுள்ள மழை நீரை கொண்டு தற்போது நெல் மற்றும் சிறுதானியங்கள் நடவு பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நெல் 8, 962 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 71,690 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 10,443 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 30,564 ஹெக்டேரிலும், கரும்பு 8,286 ஹெக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவற்றில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவா னது வளர்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு, வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை வளர்ச்சி நிலையிலும், ஆமணக்கு வளர்ச்சி மற்றும் பூப்பறிவு நிலையிலும், பருத்தி வளர்ச்சி நிலையிலும், கரும்பு வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும் உள்ளன.

    மேலும் தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக மர வள்ளி 3,295 ஹெக்டேரிலும், சின்ன வெங்காயம் 3,411 ஹெக்டேரிலும், வாழை 2,349 ஹெக்டேரிலும், மஞ்சள் 1,722 ஹெக்டேரிலும், தக்காளி 565 ஹெக்டேரிலும், கத்தரிக்காய் 523 ஹெக்ட ரிலும், வெண்டை 337 ஹெக்டேரிலும், மிளகாய் 292 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில்

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகன நிறுத்தமிடங்கள் உள்ளன. இது தனியாருக்கு ஏலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஏலதாரர்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    24 மணி நேரத்துக்குஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ. 15 வசூலிக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

    ஆனால் இந்த வாகன நிறுத்துமிடங்களில் காலை 10 மணிக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை 9 மணிக்கு வாகனத்தை எடுக்கச் சென்றால் இரண்டு நாட்களுக்கு உரிய கட்டணத் தொகை ரூ.30 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து கேட்டால் நள்ளிரவு 12 மணியுடன் ஒரு நாள் கணக்கு முடிந்து விடுகிறது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக வண்டி எடுத்தாலும் இன்னொரு நாள் கணக்கு வந்துவிடும் என புதிய விளக்கம் அளிக்கிறார்கள்.

    12 மணி நேரத்துக்கு ரூ. 15 வசூல் செய்வது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது.

    வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக கட்டணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகள் மீறி கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 'பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×