search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extra"

    • தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
    • தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது

    கடலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் அமாவாசை மற்றும் சஷ்டி விரதம் தொடங்கு வதால் கடலூர் திருப்பா திரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க் கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விழாக்கா லங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந் துள்ளது. அதன்படி அரும்பு மற்றும் மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. தற்போது மழை காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.

    • நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பு மழை அளவை காட்டிலும் 323.73 மில்லி மீட்டர் கூடுதலாகும்.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 30 ஏரிகள்

    முழுமையாக நிரம்பி யுள்ளன.

    23 ஏரிகள் நிரம்பாத நிலையில் உள்ளன. மீதமுள்ள 26 ஏரிகள் பாதி அளவிலேயே நிரம்பி இருக்கின்றன. இன்னும் ஓராண்டுக்கு வேளாண் பணிகளுக்கு தேவையான நீர் இருப்பு நிரம்பிய ஏரிகள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். நிரம்பிய ஏரி களின் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள விவசாயிகள், தேங்கியுள்ள மழை நீரை கொண்டு தற்போது நெல் மற்றும் சிறுதானியங்கள் நடவு பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நெல் 8, 962 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 71,690 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 10,443 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 30,564 ஹெக்டேரிலும், கரும்பு 8,286 ஹெக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவற்றில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவா னது வளர்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு, வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை வளர்ச்சி நிலையிலும், ஆமணக்கு வளர்ச்சி மற்றும் பூப்பறிவு நிலையிலும், பருத்தி வளர்ச்சி நிலையிலும், கரும்பு வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும் உள்ளன.

    மேலும் தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக மர வள்ளி 3,295 ஹெக்டேரிலும், சின்ன வெங்காயம் 3,411 ஹெக்டேரிலும், வாழை 2,349 ஹெக்டேரிலும், மஞ்சள் 1,722 ஹெக்டேரிலும், தக்காளி 565 ஹெக்டேரிலும், கத்தரிக்காய் 523 ஹெக்ட ரிலும், வெண்டை 337 ஹெக்டேரிலும், மிளகாய் 292 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 'பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×