search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்
    X

    புதிய வகுப்பறை கட்டிட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு.

    5 பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்

    • நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • மேலப் போலகம் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணியை நாகை எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அப்போது வலியுறுத்தினார்.

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரம் தொடக்க ப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், எரவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், போலகம் ஊராட்சி மேலப் போலகம் தொட க்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைந்து அங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    Next Story
    ×