search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    புதுடெல்லி :

    எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

    இனி அந்த பிரச்சினை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.

    இதுதொடர்பாக ரெயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது.

    அந்த உத்தரவில், "மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும். மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்ட கடையை மூட மேயர் மகேஷ் உத்தரவு
    • சில கடைகளில் வெயில் மழைக்கு என்று கடையின் முன்பு சீட்டுகள் அமைத்து மடக்கி வைத்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட் டார் சவேரியார் ஆலய சாலையில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து ரெயில்வே ரோடு, வாகையடி தெரு பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே ரோடு பகுதியில் கழிவுநீர் ஓடைகள் மோசமான நிலையில் இருந்தது. அதை சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் கோட்டார் பகுதியில் கடைகள் முன்பு சிலர் ஆக்கிரமித்து கட்டி வைத்திருந்தனர்.

    அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். ரெயில்வே ரோடு பகுதியில் ஆக்கர் கடை ஒன்று எந்த ஒரு அனுமதியும் இன்றி பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அதை உடனடியாக மூட மேயர் மகேஷ் உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கர் கடையை உடனடியாக மூடினார்கள்.

    மேலும் சவேரியார் ஆலயத்தில் இருந்து ரெயில்வே ரோடு பகுதிகளில் உள்ள சாலைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.ஆனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் போக்குவரத்துக் இடையூறாக இருந்து வருகிறது. அந்த மின்கம்பங்களை மாற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். கோட்டார் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கழிவு நீர் ஓடைகளும் சீரமைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது குப்பை இல்லா நகரமாக நாகர்கோவில் மாநகராட்சி விளங்குகிறது.ஆனால் நாகர்கோவில் நகரின் பிரதான சாலைகளின் ஒன்றான ெரயில்வே ரோடு ெரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    இங்குள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமாக சுகாதார சீர்கேடாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது இது தொடர்பாக ஏற்கனவே ெரயில்வேக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த ரோட்டை மாநகராட்சி இடம் ஒப்படைக்க ெரயில்வே துறைக்கு கடிதம் எழுதப்படும்.நாகர்கோவில் மாநகராட்சியிடம் இந்த சாலை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.

    தற்பொழுது நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் வெயில் மழைக்கு என்று கடையின் முன்பு சீட்டுகள் அமைத்து மடக்கி வைத்துள்ளனர். தேவைப்படும் நேரங்களில் அதை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது ஆக்கிரமிப்பை உண்டாக்க வழி வகுக்கும்.

    எனவே அது மாதிரியான கொட்டகைகளையும் அமைக்க கூடாது .அப்படி அமைத்திருக்கும் கடைக்காரர்கள் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் மாநகராட்சி மூலமாக அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மின் கம்பங்களை மாற்று வது தொடர்பாக மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அனந்தலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வாலிபர் ஒருவர் ரூ. 10 லட்சம் மோசடி செய்தார்.
    • இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது55). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது மகன் பிரகாஷ் வேலை தேடிக்கொண்டி ருந்தார். அப்போது நண்பர் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கருத்தபட்டியை சேர்ந்த தங்கமாயன்(35) என்பவர் அறிமுகமானார். அவர் உங்களது மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படு வதாகவும் கூறினார்.

    இதை நம்பி தங்கமாயனிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் வரை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர் ஹவுரா ரெயில் நிலையத்தில் வேலைக்கு சேர்வதற்கான ஆணையை வழங்கினார்.

    அதனை எனது மகன் கொண்டு சென்று விசாரித்த போது போலியானது என தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான் பணத்தை திருப்பித்தருமாறு கேட்கேன். ஆனால் அவர் பணத்தை தராமல் கடந்த ஒரு வருடமாக பல்வேறு காரணங்களை கூறி வருகிறார். எனவே தங்கமாயனிடம் இருந்து ரூ.10 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம்நகர் போலீசார் தங்கமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.

    தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.

    அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    • நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

    நாமக்கல்:

    கோடை காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே, அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, அர்சிகரே, தும்கூர், யஸ்வந்த்பூர், பெங்களூரு, பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்கவுள்ளது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கு, நாமக்கல் ரெயில் நிலையத் தில் மட்டும் நிறுத்தம் வழங் கப்படவில்லை. நாமக்கல் நீங்கலாக மற்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல் லும். இது நாமக்கல் பகுதியில் வசிக்கும் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.

    சமீப காலமாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள், நாமக்கல் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் நிறுத்தத்தை மட்டும் புறக்கணிப்பதா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழும்புகிறது.

    நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்ல தற்போது ரெயில் வசதி இல்லை. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக் கல்லில் நிறுத்தம் கொடுத் தால் நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்ல வசதியாக இருக்கும்.

    நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி

    னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலை யத்தை அனைத்து ரெயில் களும் படிப்படியாக புறக்க ணிக்கும் அபாயம் உருவாகும்.

    இந்த பிரச்சினையில், மத்திய இணை அமைச்சர் முருகன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும், நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.

    மேலும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் உடனடியாக நாமக்கல் நிறுத்தத்தை வெளியிட சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் பகுதியில் உள்ள ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாமக்கல் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மட்டும் அல்ல. லாரி உள்ளிட்ட மோட்டார் தொழில் மற்றும் கோழிப்பண்ணை, கோழி முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டாவது நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு தெற்கு ரெயில்வே முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.

    • கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    • இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    75 பேர் கைது

    அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க

    ளிடம் இருந்து ரூ.28 லட்சம்

    மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த

    னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.

    ரூ.1 லட்சம் மதிப்பு

    நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது.
    • இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது.

    புதுடெல்லி :

    கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் இந்திய ரெயில்வேக்கு மொத்தம் ரூ.1,83,964 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

    சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் 2022-2023-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ரெயில்வேயில் 1,109.38 டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில், 1,029.96 டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டன. இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

    வருவாயைப் பொறுத்தவரை, சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ.1,35,051 கோடி கிடைத்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. இதன்மூலம் வருவாய் 46 சதவீதம் அதிகரித்து ரூ.38,483 கோடி ரூபாயை எட்டியது. முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40,197 லட்சமாக இருந்தது. இதன் மூலம் வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10,430 கோடி ஆனது.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்ததில் பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் தஞ்சை இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மகாதேவன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    இருப்பு பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டவாளத்தில் வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    மேலும் நடைமேடை முழுவதும் கண்காணித்து வருகின்றனர். பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

    இதேபோல் நீடாமங்கலம், பூதலூர், மன்னார்குடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    கப்பியறை அருகே இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டிய இடத்தை விஜய்வசந்த் எம்.பி பார்வையிட்டார். ரெயில்வே அமைச்சகம் மற்றும் துறைக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    அவருடன் பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்
    • மாயனூர்-வீரராக்கியம் இடையே

    கரூர்

    கரூரில் இருந்து திருச்சி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மாயனூர்-வீரராக்கியம் இடையே உள்ள பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரெயில் மோதி இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×