search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணகுடி"

    • 10 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
    • விழாவில் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சபாநாயகர் அப்பாவு முயற்சியால் சுமார் 300 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி வைத்து உள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக பணகுடி பேரூராட்சி பகுதி களில் பணகுடி செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளி, டி .டி. .டி. ஏ. தொடக்கப் பள்ளி, பணகுடி திரு இருதய தொடக்கப்பள்ளி, வடக்கு இந்து நடுநிலை பள்ளி, அஸ்சே நடுநிலைப்பள்ளி, தளவாய்புரம் டி.டி.டி.ஏ. நடு நிலைபள்ளி, வீர பாண்டி யன் இந்து தொடக்க பள்ளி, நதிப்பாறை இந்து தொடக்கப்பள்ளி, ரோஸ் மியாபுரம் டி.டி.டி.ஏ தொடக்க பள்ளி, ரோஸ் மியா புரம் அரசு உய்நிலைப் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி களுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    இதில் பணகுடி பங்கு தந்தை இருதயராஜ், சேசு அருளானந்தம், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர சுப்பிரமணியன், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், கவுன்சிலர்கள் முத்துக் குமார், பூங்கோதை, ஜெய ராம் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×