என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "50 பெண்கள் கற்பழிப்பு"
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது சித்தார்பட்டி கிராமம். இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ராஜதாணி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூட்டு வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட வைகளால் அவதியடைந்து வருகின்றனர். எனவே காய்ச்சல் பரவாமல் இருக்க சித்தார்பட்டியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்து காய்ச்சல் மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சித்தார்பட்டிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர்.
சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #50killed #oiltankercrash #DRCongo
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாய்-மகன் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை மணிகண்டன் எழுந்து பூஜை அறைக்கு சென்றார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதையும், பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹவானா:
50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இன்டர் நெட் பார்க்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம்.
ஆனால் பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போது தான் முழு இணைய சேவை (இன்டர் நெட்) வசதியை பெற உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.
அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி பெற்றன.
ஆனால் எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே உள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது. பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிக மெதுவாக இருக்கும். அந்த நெட் வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் கிடையாது. ஏனெனில் அங்கு தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால் அங்கு இணையம் (நெட்வொர்க்) என்பது ஒரு பெரிய ஆடம்பர கனவு போல இருந்தது. #Cubainternet
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மோகன பிரியா நகரில் வசித்து வருபவர் அலாவுதீன் பிச்சை (வயது 52). வியாபாரி.
வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். இன்று காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் அலாவுதீன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் தடயத்தை பதிவு செய்தனர்.
வியாபாரி வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்