search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway minister piyush goyal"

    மேற்கு வங்காளத்தின் சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இரங்கல் தெரிவித்துள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் சந்திரகாசி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

    ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேம்பாலத்தில் திபுதிபுவென ஏறினர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்த மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சந்திரகாசி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், சந்திரகாசி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என  பதிவிட்டுள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
    அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து குறித்து அறிந்து இந்தியா திரும்புகிறார். AmritsarTrainAccident #PiyushGoyal
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் நேற்று 50க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு ப்ணிகள் நடைபெற்று வருகின்றன

    இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து பற்றி அறிந்தவுடன், அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இந்தியா விரைகிறார்.

    பஞ்சாப் ரெயில் விபத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப் ரெயில் விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident #PiyushGoyal
    விமான கழிவறைகளுக்கு நிகராக ரெயில்களில் செயல்பாட்டில் இருந்து வரும் பயோ கழிவறைகளை மாற்ற தயாராக உள்ளோம் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #PiyushGoyal #Biotoilets #VaccumBiotoilets
    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் ஓடும் ரெயில்களில் மே மாதம் 31-ம் தேதி கணக்கின்படி சுமார் 37,411 பெட்டிகளில் ஒரு லட்சத்து 36,965 பயோ கழிவறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒரு பயோ கழிவறைக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது.



    இந்நிலையில், விமானங்களுக்கு நிகராக, விமானங்களில் இருப்பது போன்றே வாக்குவம் பயோ கழிவறைகளை அமைக்க ரெயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது.

    முதற்கட்டமாக, சுமார் 500 வாக்குவம் பயோ கழிவறைகளை பரிசோதனை முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டரை லட்சம் பயோ கழிவறைகளை மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார். #PiyushGoyal #Biotoilets #VaccumBiotoilets
    ×