search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 killed"

    சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. #SomaliaBlasts
    மொகடிஷு: 

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #SomaliaBlasts
    அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
    ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
     
    அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.

    இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    #Dussehra #Amritsar #TrainAccident
    அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து குறித்து அறிந்து இந்தியா திரும்புகிறார். AmritsarTrainAccident #PiyushGoyal
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் நேற்று 50க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு ப்ணிகள் நடைபெற்று வருகின்றன

    இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து பற்றி அறிந்தவுடன், அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இந்தியா விரைகிறார்.

    பஞ்சாப் ரெயில் விபத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப் ரெயில் விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident #PiyushGoyal
    அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
    ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
     
    அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை பஞ்சாப்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகே சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

    இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
     
    அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.



    இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்  என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப்பில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KenyaBusAccident
    நைரோபி:

    கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பேருந்து ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 52க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அந்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபொழுது சாலையில் திரும்பியபோது திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் பலியாகினர். பேருந்தின் மேற்கூரை உடைந்து நொறுங்கியது.



    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் சாலை விபத்துகளில் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. #KenyaBusAccident
    ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ நாட்டின் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர். #50killed #oiltankercrash #DRCongo
    கின்ஷாசா:

    ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர்.

    சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #50killed #oiltankercrash #DRCongo

    ×