search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanker lorry accident"

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று காலை நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    மேச்சேரி:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ஒயிட் மண்எண்ணை ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்றிரவு புறப்பட்டது.

    இந்த லாரியை கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டினர். ஒயிட் மண்எண்ணையை வாங்கி செல்லும் எர்ணாகுளம் மாட்டுகுழா பகுதியை சேர்ந்த நாசர் மற்றும் மற்றொரு டிரைவரும் அந்த லாரியில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த ஒயிட் மண்எண்ணை பெயிண்டில் கலப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி இன்று காலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் மேச்சேரி-மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி குள்ளமுடையானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது நிலை தடுமாறிய லாரி தாறு மாறாக ஓடியது. பின்னர் சாலையோரமாக கிடந்த கல்லில் ஏறிய லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர்கள் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர். லாரியில் இருந்த ஒயிட் மண்எண்ணை சாலையில் ஆறாக ஓடியது. மேலும் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே பெட்ரோல் பங்கும் இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    உடனே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு நிலையத்திற்கும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்கும் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். மேட்டூரில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    உடனே அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லாத வகையில் சாலையின் இருபக்கமும் கயிறு கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி சென்றன.

    இதற்கிடையே தீ விபத்து ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டேங்கர் லாரியை தூக்கி நிறுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசாரும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ நாட்டின் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர். #50killed #oiltankercrash #DRCongo
    கின்ஷாசா:

    ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர்.

    சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #50killed #oiltankercrash #DRCongo

    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே இன்று சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல்-டீசலை பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னை மணலியில் இருந்து 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது.

    இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 29) ஓட்டி வந்தார். அவருடன் கீளினர் ஒருவரும் லாரியில் வந்தார்.

    அந்த டேங்கர் லாரி இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கசாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் இடுபாட்டுக்குள் சிக்கி டிரைவர் காளியப்பன், லாரி கிளீனர் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

    தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் வெளியேறி அங்கிருந்த ஓடையில் ஆறு போல் ஓடியது.

    இந்த தகவல் செங்குறிச்சி பகுதியில் காட்டு தீ போல பரவியது. உடனே அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

    டேங்கர் லாரியில் வெளியேறிய பெட்ரோல், டீசலை போட்டி போட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து உளுந்தூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் டீசல், பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இடிபாடுக்குள் சிக்கி காயம் அடைந்த லாரி டிரைவர் காளியப்பன் மற்றும் கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் கீழே கொட்டி கிடந்ததால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
    ×