search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 pound jewelry robbery"

    • கொள்ளையர்கள் தாக்கியதில் நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரும் பலத்த காயம் அடைந்து இருந்தனர்.
    • 2 பேரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை பூங்கா நகர் பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர்கள் அலாவுதீன், சக்ஜத். இவர்கள் இருவரும் நேற்று இரவு நகை பட்டறையில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டனர். பின்னர் நகை பட்டறையில் இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளை அடித்தனர். இந்த நகைகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து நைசாக தப்பினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் யானைகவுனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரும் பலத்த காயம் அடைந்து இருந்தனர். இதை அடுத்து 2 பேரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    அப்போது கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டான். அவனது பெயர் ககத்ராய் என்பது தெரியவந்தது. அவனிடம் போலீசார் தப்பி ஓடிய கொள்ளையனான கூட்டாளி பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த கொள்ளையனின் பெயர் அஜய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொள்ளையன் அஜய்யை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பரபரப்பான பூங்கா நகர் பகுதியில் கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலாக நகை பட்டறை அதிபர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தப்பி ஓடி தலைமறைவான கொள்ளையன் அஜய்யிடம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகை பட்டறையில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் மற்ற பட்டறை அதிபர்கள் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர்.
    • தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையை அடுத்த வி.எம்.சத்திரம் ஜான்சி ராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 44). இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி வனிதா மாநகர பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ராமசாமி அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கும்பல் ராமசாமி வீட்டிற்குள் புகுந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டில் கிடந்த துணிகளை கொண்டு ராமசாமி மற்றும் அவரது குழந்தைகளை கட்டிப்போட்டனர்.

    பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துள்ளனர். அந்த நேரத்தில் வனிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் 5 பேரும் நகை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்குள் வந்த வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

    உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்த ராமசாமி கொள்ளையர்களை தேடி உள்ளாா். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து தூத்துக்குடி சாலையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள புதுபாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிகிச்சை பெற்று வரும் 2 வாலிபர்களும் தூத்துக்குடி லயன்ஸ்டோன் பகுதியை சேர்ந்த முத்து, சிலுவை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தொடர் விசாரணையில் விபத்தில் சிக்கிய சிலுவையும், முத்துவும் தங்களது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து பாளை வி.எம்.சத்திரத்தில் ராமசாமியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் யாரிடமும் சிக்காமல் தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்தவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முத்து, சிலுவை ஆகியோரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    அப்போது அவர்களுடன் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த கண்ணன், கிஷோர் டேனியல் மற்றும் கிங்ஸ்டன் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 சவரன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    விபத்தில் காயமடைந்த முத்துவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொள்ளையில் நாகர்கோவிலை சேர்ந்த சம்சுதீன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    • வெளிநபர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடியாத அளவுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம்.
    • பாதுகாப்பையும் மீறி மர்மநபர்கள் சாதுரியமாக வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் அசோகன்(வயது 55). இவர் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் அதிகாரிகள் குடியிருக்கும் அந்த வளாகத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற மற்ற ஊழியர்கள் பார்த்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போனில் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் விபரத்தை கேட்டபோது சுமார் 50 பவுன் தங்க நககைள் வைத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் அந்த நகை முழுவதையும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதற்கிடையே அதே பகுதியில் உள்ள ராமன் என்ற அணுமின் நிலைய அதிகாரியின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    வெளிநபர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடியாத அளவுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால் அந்த பாதுகாப்பையும் மீறி மர்மநபர்கள் சாதுரியமாக வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர்.
    • கடையின் உள்ளே இருந்த லாக்கரை கொள்ளை கும்பலால் உடைக்க முடியவில்லை.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் வடக்கு தெருவில் நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது.

    இந்த வடக்கு தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர்.

    நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் நகைக்கடையில் 3-வது மாடியில் ஏறி கண்காணிப்பு கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை துண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த 3சிலிண்டர்கள் மூலம் நகைக்கடையில் இருந்த இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர். நூல் அளவும் வெளியில் தெரியாத வண்ணம் நூதன முறையில் செயல்பட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    கடையின் உள்ளே இருந்த லாக்கரை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் நகைக்கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். இன்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் கொள்ளை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடி நின்றது யாரையும் பிடிக்கவில்லை. இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் புதிய பொருட்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலூரில் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த வடக்கு தெருவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளியூர் சென்றிருந்த வியாபாரியின் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மோகன பிரியா நகரில் வசித்து வருபவர் அலாவுதீன் பிச்சை (வயது 52). வியாபாரி.

    வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். இன்று காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் அலாவுதீன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் தடயத்தை பதிவு செய்தனர்.

    வியாபாரி வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
    ×