search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான்"

    • கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
    • 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் உள்ளது.

    கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

    இத்திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
    • பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன

    லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.

    பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். 

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    • மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வலுவிழந்து இருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். இதன் காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை கிழக்கு ராஜஸ்தானில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.

    ஜெய்பூர்

    பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.

    மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.

    ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்யாமல் அருகே இருந்தவர்கள் செல்பி மற்றும் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் சாலையோரம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடினர்.

    விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே இருந்த சிலர், விபத்தில் சிக்கிய 3 பேரையும் காப்பற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போன்களை எடுத்து  உயிருக்கு போரடியவர்களுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்தவர்களுடன் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ விபத்தில் சிக்கிய 3 பேரும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக சாலையோரம் உயிருக்கு போராடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு யாரும் உதவ முன்வராததால் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட உடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒருவேலை அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்’ என தெரிவித்தார்.

    விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்யாமல் அருகே இருந்தவர்கள் செல்பி எடுத்த சம்பவம் மக்களிடையே மனிதநேயம் மரித்துக்கொண்டு வருவதற்கான மேலும் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்து சுற்றுவதாக கூறியுள்ளார். #PMModi
    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், 2 ஆயிரத்து 100 கோடி மதிப்புடைய 13 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெய்ப்பூர் சென்றார்.

    அம்மாநிலத்தை சேர்ந்த  சுமார் 2.5 லட்சம் பேர் வரை மத்திய மற்றும் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்திருப்பதாக சமீபத்தில் வெளியான பொது நிர்வாகத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி, ஜெய்ப்பூர் நகரில் உள்ள அமருதன் கா பாக் மைதானத்தில் கூடியிருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத் திட்டங்களால் பலனடைந்தவர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

    “ராஜஸ்தான் மாநில முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றதை மறந்துவிடாதீர்கள். அவர் பதவியேற்றபோது மாநிலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவற்றை எல்லாம் சீர்திருத்தி முதல்வர் சிந்தியா மாநில அரசின் செயல்பாட்டு முறையை சிறப்பாக மாற்றியமைத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொண்டு வெளியில் உலவுகின்றனர். அவர்கனைப் பார்த்து ஜாமீன் கட்சிக்காரர்கள் என மக்கள் விமர்சிக்கிறார்கள்.

    ஆனால், நாங்கள் காங்கிரஸை போன்று ஊழலை பார்த்து சகித்துக் கொண்டிருக்க மாட்டோம், புதிய இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம். பா.ஜ.க.விற்கு ஒரே நோக்கம் உள்ளது எனில் அது நாட்டின் வளர்ச்சி மட்டுமே.

    ராணுவத்தினரின் திறன் மற்றும் செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டு விமர்சிக்கின்றனர். அவர்களை இந்திய மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை பற்றி குறை கூறுபவர்கள் இங்கு அமர்ந்திருக்கும் பயனாளிகளின் முகத்தில் உள்ள புன்னகையை பார்த்தால் உண்மை நிலையை புரிந்துகொள்வார்கள்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 33 லட்சம் பேர் இலவச கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

    70 ஆண்டினை ராஜஸ்தான் அடுத்த ஆண்டு நிறைவு செய்கிறது. எனவே அடுத்த ஆண்டு, புதிய இந்தியாவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றும் விதமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் மாநிலமாக உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமரின் வருகையையொட்டி ஜெய்ப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #PMModi
    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் என கூறப்பட்ட இந்த பூங்காவுக்கு முதல்வர் வசுந்த்ரா ராஜே அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், ஆலை அமைய உள்ள இடம் ஒரு ஆலையத்தின் டிரஸ்டுக்கு சொந்தமானது என்றும், இந்த நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என பின்னர் தெரிய வந்தது. இதனால், உணவுப்பூங்கா அமைப்பதில் முட்டுக்கட்டை விழுந்தது.

    மாநில அரசும் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. தற்போது, மாற்று இடம் தேடப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் புதிய உணவுப்பூங்கா அமைக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பத்திற்காக ரெயில் நிலையத்தில் சுமை தூக்குபவராக பெண் ஒருவர் பணிபுரியும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #manjudevi #womanporter
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் மஞ்சு தேவி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவன் இறந்த பிறகு அவர் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது குழந்தைகளை வளர்க்க கணவன் பார்த்த பணியை தான் பார்க்க விரும்பினார்.


    அவரது கணவர் ரெயில்வேயில் சுமை தூக்குபவராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது கணவர் செய்து வந்த வேலை செய்ய தொடங்கினார். முதலில் கடினமாக இருந்தாலும் அவரது குழந்தைகளுக்காக செய்யும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.


    ஆண்கள் அதிகம் கொண்ட துறையில் பெண்ணாக சாதனை படைத்த மஞ்சு தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரின் சாதனையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பாராட்டி பரிசளித்தது குறிப்பிடதக்கது. #manjudevi #womanporter
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை என வாட்ஸ்அப்பில் பரவிய புரளியால் அந்த கோவிலின் பூசாரி தாக்கப்பட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

    ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. இதனை அடுத்து, இந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல வரிசையில் நின்று, பின்னர் பூசாரி அருகில் வந்த போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட பெண் வேறு ஒருவருடன் போனில் பேசியதை கேட்ட வாலிபர் கோபத்தில் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார். அப்போது நிஷா போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். யாருடன் பேசி கொண்டிருந்தாய்? என கேட்டதற்கு நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ் போனை கேட்டதற்கு அவர் தர மறுத்தார்.

    இதையடுத்து, ஹரிஷ் கோபத்தில் நிஷாவை பயங்கரமாக தாக்கினார். அதனை தடுக்க வந்த நிஷாவின் தாயாரையும் ஹரிஷ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நிஷா உடலில் ஏற்பட்ட உள் காயங்களினால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தினால் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen

    ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

    மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.



    கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
    நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

    இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
    ×